எரிபொருள் கோட்டாவின் அளவு அதிகரிப்பு !

பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவை மேலும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு – 8 லீட்டரும், மோட்டார் சைக்கிள்களுக்கு – 7 லீட்டரும்பேருந்துகளுக்கு – 60 லீட்டரும், கார் – 30, லொரி – 75 லீட்டரும் வழங்கப்படும். அதேவேளை வேன்கள்- 30 லீட்டரும் land vehicles...

இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதி மன்றில் ஆஜராகுவதாக தீர்மானம்!!

இன்று (18) அனைத்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதி மன்றில் ஆஜராக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வணிக கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார். நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்தித்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். சித்திரை புத்தாண்டு தினத்தன்று தீவக நுழைவாயிலில் நயினா தீவு அம்மனின் சிலை ஒன்று...
Ad Widget

தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துமாறு கோரிக்கை!

தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால், உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும். அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். தினமும் 3 லீட்டர்...

அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து குறித்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமை காரணமாக இறக்குமதியானர்கள் இந்தக் கட்டணங்களை...

நிறைவுக்கு வந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம்!

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் பழரசம் வழங்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் கையெழுத்துப் போராட்டமும் நல்லூரில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்பாக நேற்று (16) காலை 9 மணி அளவில் இப்போராட்டம்...

நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலை தொடர்பில் யாழ். நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை அவ்விடத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி பலகையில் யாழ்ப்பாண பொலிஸார் ஒட்டியுள்ளனர். யாழ். பண்ணைச் சுற்று வட்டத்தில் திடீரென தோன்றிய நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றினால்...

யாழ் பல்கலையில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!!

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை யாழ் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின்...

பனாமா நாட்டு கப்பலுக்குள் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டு கப்பலில் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற குறித்த நால்வரும் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே...

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல் : ஊழியர்கள் வைத்தியசாலையில்

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய...

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு நடவடிக்கையில் கடற்படை!

காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாவகச்சேரியில் இடம்பெற்ற கொடூர கொலை!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப்பகுதியில் வைத்து நேற்று மாலை ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் வசிக்கின்ற 20 வயதான இளைஞர் மனநல சிகிச்சைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம்...

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி...

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்?

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பால் மாவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய...

நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்தவர்களை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்!

அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்தின் பின் இயங்காத குறித்த நெசவுசாலை கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன....

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து 29 ஆம் திகதி பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வாரிக்கொள்கை மற்றும் அதற்கு எதிரான ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முன்னதாகவும்...

சுற்றுலா பயணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்!

எதிர்வரும் பண்டிகை காலத்தில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,சுற்றுலா பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட...

இந்தியா உடன் தலையிடவேண்டும்! வடக்கிற்குவரும் தெற்கு தலைவர்கள் சந்திப்பை புறக்கணிப்போம் – நல்லை ஆதீன முதல்வர்

சைவ சமயத்திக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்கவேண்டும் எனவும், இந்தியா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் எனவும் சைவ சமய அமைப்புகள தீர்மானித்துள்ளதாக நல்லை ஆதீன முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள்....

கடும் இனவாத கொள்கையுடன் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றது – கஜேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சிங்கள மயமாக்கலுக்கு என அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இந்த தொல்பொருள் திணைக்களத்தோடு முப்படைகளின் ஆதரவுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இருப்புக்கள் இல்லாதொழிக்கப்படுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றில்...

சூரியன் உச்சம் கொடுக்கும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும்...

எரிவாயுவின் விலை பாரிய அளவில் குறைப்பு!!

இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென முதித பீரிஸ் குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி...
Loading posts...

All posts loaded

No more posts