Ad Widget

விரைவில் வரலாம் “குப்பைக்கும் வரி”

திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் தற்போது பெரும் நெருக்கடியாகியுள்ளநிலையில் எதிர்காலத்தில் நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வசிப்பவர்களிடமிருந்து குப்பைக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். (more…)

எதிர்வரும் காலங்களில் சைக்கிள்களுக்கும் கண்ணாடி

பக்க கண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்ல வேண்டும் என உத்தரவு!

சுதந்திர பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்லவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 12.1.2013 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.அம்மாநாட்டுக்கு அண்மையில் நியமனம்பெற்ற சகல பட்டதாரிகளும் அவ்வப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக தமது செலவில் சென்று வரவேண்டும் என பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். (more…)

வீட்டுக்கு தீ வைத்த வி­ஷமிகள்

உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் வளவினுள் புகுந்த விஷமிகள் வீட்டினைத் தீயிட்டு எரித்துள்ளனர். வீட்டுக்காரர் வெளியே சென்ற நேரம் பார்த்து விஷமிகள் தீ வைத்ததில் வீடு முற்றாக எரிந்ததுடன், உடைமைகளும் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வரணி கரம்பைக்குறிஞ்சி கிழக்கில் இடம்பெற்றது. (more…)

சுகாதார அமைச்சினால் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் மருந்துகள் தனியார் வைத்தியசாலைக்கு கடத்தல்?

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் முக்கியமான சில மருந்துகள் சில தனியார் வைத்தியசாலைகளுக்கு கடத்திச் செல்லப்படுவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது.குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மாத்திரம் நோயாளர்களுக்கு என அமைச்சினால் வழங்கப்படும் (more…)

இலங்கை மின்சார சபை மற்றும் பருத்தித்துறை பிரதேச அலுவலகம் மக்களை உதாசீனப்படுத்தி வருகின்றனவா?

வடமராட்சிப் பிரதேச மின்பாவனையாளர்களை இலங்கை மின்சார சபை பருத்தித்துறை பிரதேச அலுவலகம் என்பன தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகின்றன. இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது இருப்பது வேதனை தருகின்றது என்று வடமராட்சிப் பிரதேச மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)

விடுதிகளுக்கு வெளியே கட்டில்கள் இன்றி நோயாளிகள் தரையில் இருந்து சிகிச்சை பெறும் அவலம்

யாழ். போதனா வைத்தியசாலையில் விடுதிகளுக்கு வெளியே கட்டில்கள் இன்றி நோயாளிகள் தரையில் இருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.யாழ். குடாவில் தற்போது தொற்று நோய் மற்றும் தொற்றா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் வீதமும் அதிகரித்துள்ளது. (more…)

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்திலுள்ள வளங்களைச் சுரண்டும் திணைக்களங்கள்; பிரதேச பொது அமைப்புகள் குற்றச்சாட்டு

மணல் பிட்டிகளிலிருந்து அடி நிலத்தோடு மணல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் நீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் உள்ள வளங்களைச் சுரண்டுவதில் அரச திணைக்களங்களும், நிறுவனங்களும் குறியாக இருக்கின்றார்களே தவிர, பிரதேச அபிவிருத்திக்கென எதனையும் செய்வதில்லை (more…)

சாரதிகளிடம் கொத்து ரொட்டியும் சாராயமும் கேட்கும் போக்குவரத்து பொலிஸார்!

ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களிடம் கொத்து ரொட்டியும் சாராயமும் வாங்கித் தருமாறு யாழ். குடாவில் பொலிஸார் கேட்பதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பாலும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.. (more…)

எதிர்க்கட்சிக்கு எதிராக உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ‘றெமீடியஸ்’ -யாழ் மாநகரசபையில் சம்பவம்!

அடுத்தடுத்த ஆண்டில் இந்த விளக்கீட்டுத்தினத்தில் மாவீரர்தினம் அமையாது. வேறு ஒரு தினத்தில் அமையப்போவது நிச்சயம். அந்த நேரத்தில் தனது வீட்டில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந் நிகழ்வை இதய சுத்தியுடன் அனுஷ்டிப்பார்களா? என யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் மு.றெமிடியஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை மீது எதிர்க்கட்சித்தலைவர்...