Ad Widget

ஒரு றாத்தல் பாணையும் விட்டு வைக்காத திருடர்கள்

breadசைக்கிளில் கொழுவியிருந்த ஒரு றாத்தல் பாண், கடைக்குச் சென்று திரும்பிய பின் காணமல் போன சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் சிவன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை இரவு ஒரு றாத்தல் பாண் வாங்கிய ஒருவர் அதனை தனது சைக்கிளில் கொழுவிவிட்டு, கடையொன்றுக்கு மேலதிக பொருட்களை வாங்குவதற்காகச் சென்று திரும்பிய போது சைக்கிளில் கொழுவியிருந்து பாண் காணாமல் போயிருந்தது.

யாழ்பாணத்தில் தற்போது திருடர்கள் ஒரு றாத்தல் பாணைக் கூட திருடத் தொடங்கியுள்ளனேரே என்று பானைத் திருட்டுக் கொடுத்தவர் சொல்லிச் சென்றார்.

Related Posts