கோரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 219ஆக உயர்வு; 59 பேர் குணமடைவு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 219ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. 59 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....

நாளை மாலை 6 மணிவரை வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம்!!!

காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களை கைது செய்வது தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்கள் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி காவல் துறை மா அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். காவல் துறையினரின் இந்த...
Ad Widget

யாழில் நிறைவடையும் கொரோனா காலம்: ஒரு வாரமாக தொற்றாளர்கள் இல்லை!

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணத்தில் ஒருவரும் கொரோனா தொற்றில் அடையாளப்படுத்தப்படவில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில்...

கோரோனா தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்களில் சிறப்புச் செயற்திட்டம்

யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்களில் அறிகுறிகள் எதுவுமின்றி, மக்களோடு மக்களாக உள்ள கோரோனா தொற்றாளர்களைக் கண்டுபிடிக்க, பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க சிறப்புச் செயற்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். கோரோனா பரவல் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் பொருட்டு...

கோரோனா நோய் தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை!!

“கோரோனா வைரஸ் தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பழகிய குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் முறைமை தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் அதற்கப்பாலும் இரு கட்டங்கள் முன்னோக்கி தொடர்புகளை கொண்டிருந்தவர்களை இனம்கண்டு பரிசோதிக்க வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கோரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும்...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகரை உடன் மாற்றுமாறு மருத்துவர்கள் போர்க்கொடி

மந்திகை – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை உடனடியாக இடமாற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச மருத்துவ அதிகாரி சங்கத்தின் மருத்துவர்கள், தவறும் பட்சத்தில் தொழிற் சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாணக் கிளை அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பருத்தித்துறை...

வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கை!

ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும், அவ்வாறானவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது...

48 வயதுடைய கோரோனா நோயாளி சாவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பாதித்த 7ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார். தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு கல்கிசையைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

புத்தாண்டு சம்பிரதாயங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்துங்கள் – ஜனாதிபதி செயலகம் வலியுறுத்து

புத்தாண்டு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்தால் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு தினமான வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,...

கடுமையான நோய்களுக்குள்ளானோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும்; அச்சமடையத் தேவையில்லை – பணிப்பாளர்

கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப் பராமரிப்பதற்கு ஏனைய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். “எனவே பொது மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்தால்...

கோரோனா வைரஸ் தொற்றால் 6ஆவது நோயாளி உயிரிழப்பு

நாட்டில் கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச் ) சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 178 பேர் (ஜனவரியின் இனங்காணப்பட்ட சீனப் பெண் உள்பட) கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போது வைத்தியசாலையில் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 34 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து...

மதபோதகரின் வருகையால் பிரச்சினை ஆரம்பித்தது; தற்போதைய நிலையில் எதுவும் கூறமுடியாது – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். எனினும் அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்று...

19 மாவட்டங்களில் வியாழனன்று 10 மணிநேர ஊரடங்கு தளர்வு

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். ஏனைய 19 மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு...

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!

நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய...

புத்தாண்டு நிறைவுறும்வரை கோரோனா ஒழிப்புக்கான தற்போதைய கட்டுப்பாட்டுக்கள் தொடரும்!!

புத்தாண்டு நிறைவுறும் வரை கோரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாடப்படும். அத்துடன், கோரோனா நோயாளிகள் இனங்காணப்படாத மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய...

14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கோரோனா தொற்று!!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பியவருக்கு 10 நாள்களின் பின் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10ஆம் திகதி தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாள்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து கடந்த 24ஆம் திகதி அவர்,...

கோரோனாவால் இன்று உயிரிழந்தவருக்கு வேறு நோய் இல்லை – சுகாதார அமைச்சு

இலங்கையில் கோரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டிலிருந்து திரும்பிய ஹோமாகமவைச் சேர்ந்த 44 வயதுடையவர் இன்று அதிகாலை வெலிக்கந்தை வைத்தியசாலையில் உயிரிழந்தார். “இத்தாலியிலிருந்து மார்ச் மாத முற்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த அவர், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டார்....

யாழ்ப்பாணத்தில் மூவருடன் நாட்டில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 159ஆக உயர்வு

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் மூன்று பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டில் கோரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படுவர்களில் அரியாலையைச் சேர்ந்த 15 வயதுடைய சிறமி, 20 வயதுடைய இளைஞன் மற்றும் 36 வயதுடைய பெண்...

கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 152ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 3) வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 24 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நான்கு...
Loading posts...

All posts loaded

No more posts