மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் – யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், “1985 ஆம் ஆண்டில் இருந்து...

வடக்கில் 18 பேருக்கு கோரோனா தோற்று; ஒருவர் சுதுமலையைச் சேர்ந்தவர்

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பொலிஸார் உள்பட 15 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகளும்...
Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியில் ஒருவருக்கு கோரோனா; மருத்துவர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதி 3இல் சிகிச்சை பெற்றவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த விடுதியின் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வருகை தந்த நோயாளி ஒருவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அத்துடன், 9ஆவது நோயாளர் விடுதியிலும்...

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்!!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வரும் வைரஸ் இனத்தைச் சேர்ந்த B.1.258 என்ற புது வகை வைரஸை ஒத்த வைரஸே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின்...

சுகாதாரத் துறையினர், படையினர் 300,000 பேருக்கு 3 வாரத்துக்குள் கோவிட் -19 தடுப்பூசி ஏற்றப்படும்

முதன்மைக் குழுவாக அடையாளம் காணப்பட்ட 3 லட்சம் நபர்கள் மூன்று வார காலத்திற்குள் இரண்டு அளவு கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் -19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே இதனைத் தெரிவித்தார்....

இலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்புக்கள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கடந்த...

யாழ்.பல்கலை. மாணவிக்கு கோரோனா தொற்று; கிளிநொச்சியில் மூவர், சங்கானையில் ஒருவரும் பாதிப்பு

கிளிநொச்சி 3 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் பயிலும் மாத்தளையைச் சேர்ந்த மாணவி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...

யாழில் பயணிகள் பஸ்ஸொன்றும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 11.15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸானது, பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப் போக்குவரத்து சபை பயணிகளை இறக்கிவிட்டு பஸ் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது யாழ்...

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது – 274 இறப்புக்களும் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 768 பேரும் சவுதி அரேபியா மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் அதில் உள்ளடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....

யாழ். முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 8ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்....

யாழ்.மாநகரில் ஒரே குடும்பத்தில் ஐவருக்கு கோரோனா தொற்று!!!

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....

மன்னாரில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இரண்டாவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார். மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 57 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருதய நோயாளியான அவர்...

ஒளடத பாணியை நான் கூறியவாறு பயன்படுத்தாமையே தொற்று ஏற்பட காரணம் – தம்மிக்க

கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக தம்மிக்க பண்டார கூறியவாறு,...

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார். மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் பௌத்த விகாரைகள் இருந்ததாக தெரிவித்து அகழ்வு ஆராய்ச்சி

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்று (18.01.2021)...

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என எச்சரிக்கை

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிலைமைகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின்...

தனிமைப்படுத்தலின் போது தேவையற்ற பதற்றத்தைத் தவிருங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி

கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனைவிட, யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி, தற்போதைய...

கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்ட வைத்தியர் கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரில் கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித்...

இங்கிலாந்து வீரர் ஊடாக நாட்டுக்குள் புதிய வகை கோரோனா வைரஸ்!!

இலங்கையில் கோரோனா வைரஸின் புதிய வலுவான மாறுபாட்டை வெளிநாட்டிலிருந்து வருவோரால் நாட்டுக்குள் பரவும் அபாயம் இல்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்ததாவது; இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

வடக்கில் நேற்றையதினம் 8 பேருக்கு கோரோனா தோற்று!!

வடக்கு மாகாணத்தில் நேற்றையதினம் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மன்னாரில் கடந்த சில நாள்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று...
Loading posts...

All posts loaded

No more posts