“கஜேந்திரகுமார் எங்கே?”- மூகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் நேற்று மலை 4 மணியளவில் நுழைந்த முகமூடியணிந்த மர்ம நபர்கள் நால்வர் கஜேந்திரகுமார் எங்கே எனக் கேட்டு அவரது உதவியாளரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

கிளி. மே தின கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!

“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மே நாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும் நாளாக இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. (more…)
Ad Widget

கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி.வடக்கு மக்களின் போராட்டம்

கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம் வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ளது அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம்  வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் நில ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...

எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்; மக்கள் போராட்டத்தில் குதிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறீதரன்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வி்.ஆனந்த...

‘உதயன்’க்கு எதிராக டக்ளஸ் மற்றுமொரு வழக்குத் தாக்கல்!

“உதயன்” பத்திரிகைக்கு எதிராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான்காவதாக மற்றுமொரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், அவதூறுக்கு உள்ளாக்கும் நோக்கிலும்  ”உதயன்” பத்திரிகை பல தவறான செய்தி அறிக்கைகளை பிரசுரம் செய்துள்ளதென்றும்,  அத்தகைய மூன்று செய்திப் பிரசுரங்கள் தொடர்பாக மேற்படி பத்திரிகை நிறுவனத்துக்க எதிராக...

ஏனைய கட்சிகள் இணைந்து ‘த.தே.கூ’வை பதிவுசெய்ய தீர்மானம்!

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள்...

த.தே.கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் விஜயரட்ணம் எட்வின் டானியல் ஐ.தேக. உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொண்டார்.யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களிடையே சந்திப்பு...

வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பை உடன் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்துக்கு அணிதிரளுமாறு பொதுமக்கள், பொது அமைப்புக்களுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் யாழ்ப்பாணத்தில் !

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, 'அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை நடத்தினால்...

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு யாழில் உரிமை முழக்கம்!

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது (more…)

வலி.வடக்கில் காணி சுவீகரிப்பு; உரிமை கோருவோருக்கு இழப்பீடு!

யாழ். வலிகாமம் வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள உரிமை கோரப்படாத காணிகளின் ஒருபகுதி யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைத்தல் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுவீகரிக்கப்படுவதுடன் சுவீகரிக்கப்படும் (more…)

யாழ்.வந்துள்ள அமெரிக்க குழு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசவுள்ளது!

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குழுவினர் இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவுள்ளனர். (more…)

டக்ளஸ், ஹத்துருசிங்க ஆகியோரால் முகாம்களில் வாழ முடியுமா?: வலி.வடக்கு மக்கள்

வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றறோம் இந்த முகாம்களில் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரால் வாழ முடியுமா' (more…)

காணி சுவீகரிப்புக்கு எதிராக தெல்லிப்பழையில் திங்கள் முதல் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டம்!

வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுளது என்ற அறிவிப்பை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும்,தம்மை உடனடியாக மீளக்குடியேற அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் (more…)

கூட்டமைப்பை பதிவு செய்வது சாத்தியமில்லை

முன்னாள் இராணுவ குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

வலி.வடக்கு நில அபகரிப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இன்று அவசர கலந்துரையாடல்

வலி. வடக்கில் தமிழ் மக்களின் 6381 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் சுவீகரிப்பு செய்வதாக சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் ஆராயப்படவுள்ளது. (more…)

வலி,வடக்கில் படை தலைமையகத்திற்கு 6381 ஏக்கர் காணி சுவிகரிப்பு

இராணுவப் பாதுகாப்பு பட்டாலியன் தலைமையம் அமைப்பதற்கு வலிகாமம் வடக்கில் 6381 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் சுவிகரிக்கப்பட்டுள்ளது. (more…)

வலிகாமம் பகுதிகளில் தமிழர்களின் நிலங்களில் துண்டுப் பிரசுரங்களை ஒட்டும் இராணுவத்தினர்!

வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை இராணுவத் தேவைக்கென ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பதற்கான துண்டுப் பிரசுரங்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை அந்தந்த காணிகளில் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வட மாகாண தேர்தல்! எந்தக் கட்சியானாலும் வெற்றி பெற்று காட்டட்டும்! சவால் விடுகிறார் பசில்

வட மாகாண சபைத் தேர்தலில் எதிரணியினர் எந்த வேட்பாளரையாவது நிறுத்தி வெற்றி பெற்று காட்டட்டும். என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச சூளுரைத்துள்ளார். (more…)

காணி அபகரிப்புக்கு எதிராக புதனன்று யாழில் ஆர்ப்பாட்டம்

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தால் தீவிரமாக்கப்பட்டுள்ள காணி அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts