தேசிய கொடியினை காலால் மிதித்த நால்வர் கைது

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி பகுதியில் தேசிய கொடியினை காலால் மிதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடியை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்பாட்டப் பேரணி நடாத்தப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

கைவிடப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் உள்ள வெற்றுக் காணிகள் தொடர்பான விபரங்களை உடனடியாகப் பெற்று தமக்க அனுப்பி வைக்கும்படி யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் சுற்று நிரூபம் மூலம் யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொது சுகதார அலுவலகர்களுக்கு அறிவித்துள்ளார். (more…)

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதானவர்களுடைய உறவுகளின் கண்ணீர்!!!

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்ட 44 பேரும் தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (more…)

நாவற்குழியில் சிங்களவரின் கட்டடங்கள்; பிரதேச சபை கண்டுகொள்ளாதமை ஏன்?

நாவற்குழியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சிங்கள மக்களால் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் அதனைச் சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரிப் பிரதேச சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமை குறித்துக் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழில் தாக்குதல்

தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புத்தூரில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் விநியோகிப்பதற்கு எடுத்துச்சென்ற பத்திரிகையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுக்கும் எரியூட்டப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த விநியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை (more…)

மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம், ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்

யாழ். குடாநாட்டில் 24 மெகாவாற்ஸ் மின்சாரம் விநியோகம் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)

யாழ். முஸ்லிம்களை அமைச்சர் டக்ளஸ் புறக்கணித்துவிட்டார்?

யாழ். மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் மக்களுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, எதுவித உதவிகளையும் செய்யவில்லை (more…)

வலி. வடக்கில் வீடுகள் இடித்தழிக்கப்படும் நடவடிக்கை நிறுத்தம்?

வலி. வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் பொது மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டடுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

குடாநாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

யாழ். குடா நாட்டின் பல பகுதிளிலும் இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அத்துடன் யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் தோறும் நேற்றுக்காலை தேசிய கொடி ஏற்றப்பட்டது. (more…)

கோட்டா முறையில் மாற்றம் யாழ்.மாணவருக்கு பாதிப்பு??

பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி தொடர்பில் நடைமுறையில் இருக்கும் மாவட்டக் கோட்டா முறை மாற்றப்பட்டால், அண்மைய சனத் தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் இருந்து பல் கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர் எண்ணிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

பெப்ரவரி 12 இல் ஜனாதிபதி யாழ். விஜயம்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். (more…)

வலி – வடக்கில் படிப்படியாக மீள்குடியேற்றம்: நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர்

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடரும் என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (more…)

முன்னகர்கிறது இராணுவப் பாதுகாப்பு வேலி; வலி. வடக்கு மக்கள் அச்சத்தில்

வலி. வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை 150 மீற்றர் தூரம் வரை முன்னகர்த்தும் பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த புதன்கிழமை முதல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)

சொந்த நிலங்களை எமக்கு தாருங்கள்; இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை

உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கும் தையிட்டி மற்றும் மயிலிட்டி பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

வலி, வடக்கில் 7,061 குடும்பங்கள் மீளக் குடியமர்தப்படாமல் உள்ளனர்

யாழ் மாவட்டம் வலி வடக்கு பிரதேசத்தில்; 7,061 குடும்பங்கள் இன்னமும் மீளக்குடியமர்தப்படாமல் நலன்புரிநிலையங்களில் உறவினர்கள் வீடுகளிலும் வாழந்துவருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். (more…)

கெஞ்சியபோதும் கண் முன்பாகவே வீடுகளை இடித்து அழித்தனர் படையினர்!

தமது வீடுகளை உடைக்க வேண்டாம் என்று படையினரிடம் கெஞ்சியபோதும் தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக வலி.வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் முறைப்பாடு செய்தனர். (more…)

மக்களின் காணிகளில் படையினர் விவசாயம்; மீளக்குடியமர முடியாது வலி.வடக்கு மக்கள்அந்தரிப்பு

வலி.வடக்கில் 23 வருடங்களாக தேசியபாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப்பகுதி மக்கள் மீள் குடியமர்வதற்கு அனுமதி மறுத்துவரும் படையினர், தற்போது அந்தப் பகுதியில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்முறை ரீதியான விவசாய நட வடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. (more…)

மாணவர்கள் இருவரும் அடுத்த மாதம் விடுதலை செய்யப்படுவர்!- யாழ். தளபதி

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வெலிகந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் எஞ்சிய இரண்டு மாணவர்களும் அடுத்த மாதமளவில் விடுதலை செய்யப்படுவர்கள் என இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts