8 நாட்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்புகிறது சமையல் எரிவாயு விநியோகம்!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...

700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த சில மாதங்களில் இந்த நிதி நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Ad Widget

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் -சுமந்திரன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமரை பெரும்பான்மையான மக்கள் நிராகரிக்கும் ஒரு பின்னணியில்,...

கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படும் : வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுங்கள் – மஹிந்த அமரவீர

சிறுபோக விவசாயத்தில் 50 சதவீத விளைச்சலை பெற்றுக் கொள்வது கூட சாத்தியமற்றது. ஏனெனில் ஒரு மெற்றிக்தொன் உரம் கூட இதுவரையில் இறக்குமதி செய்யப்படவில்லை.எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும்.நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுப்பட வேண்டும். வசதியில்லாதவர்கள் பூச்சாடிகளிலாவது மரகறிகளை பயிரிட வேண்டும் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர...

ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பாரியளவிலான ஆதாரங்களை அழித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சதுப்பு நிலத்தில், பல்வேறு...

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க யாழ். மாவட்ட செயலகம் பொறிமுறை

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்கள் சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக, யாழ். மாவட்ட செயலகம் பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளது. இப்பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1. பொதுமக்களுக்கான வீட்டுப்பாவனை - மக்களுக்கு விநியோகிக்கும் முறை: ● கிராம அலுவலர் பிரிவுகளுக்கென...

நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – அரச மருந்தாளர்கள் சங்கம் எச்சரிக்கை

நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்று நோய் என்பவற்றுக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நோய்களுக்காக வழங்கப்படும் மருந்துகளின் கையிருப்பு குறைவடைந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலை கட்டமைப்பு பாரதூரமான அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜித் திலகரத்ன தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (26.05.2022) நடைபெற்ற...

உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என எச்சரிக்கை!!

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். சிறுபோகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என அவர் கூறியுள்ளார்....

விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அபாயம்?

இலங்கைக்கான விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகின்றமை காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சில விமானங்கள் இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருளை நிரப்புகின்றன. எனினும் இலங்கையில் தொடரும் சிக்கல் நிலைமைகள் காரணமாக எரிபொருளை பெற்றுக்...

அத்தியாவசிய அரச சேவையாளர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு இன்று முதல் விடுமுறை!

அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மட்டும் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர். இதற்கான சுற்றுநிருபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று வெளியிட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினை காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செயற்படாதமையால் அரச உத்தியோத்தர்கள் சேவைக்கு...

யாழில் புதிய முறையில் எரிவாயு விநியோகம்!

எரிவாயு விநியோகம் பங்கீட்டு அட்டைக்கு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளரின் கண்காணிப்பின் அந்த அந்த பகுதி முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழில் கடந்த சில தினங்களாக...

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன

அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை திறந்த கணக்கு முறையின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

புலமைப்பரிசில் ஊடான 6ம் ஆண்டு அனுமதிக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

புலமைப்பரிசில் ஊடான 6ம் ஆண்டு அனுமதிக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின தமிழ் மொழி மூலப்பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் வருமாறு

குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம்!!

அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 17 இலட்சத்து 65...

வடக்கிலும் 4ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு!

வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப்...

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து...

நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு?

நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிர இதய நோய்க்கான மருந்துகள், புற்றுநோயாளிகளுக்கான மருந்துகள், நீரிழிவு நோய்க்கான தடுப்பூசிகளான இன்சுலின் போன்றவையே இவ்வாறு அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது....

15 மணி நேர மின்வெட்டு அபாயம் இல்லை – அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள்!!

எதிர்காலத்தில் 15 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல்வாதிகள் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் யாருடைய ஆலோசனையின் பேரில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் எனத் தெரியவில்லை அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நாளை...

ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!!

மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம்...

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 170 ரூபாயாக இருக்கும்

பாண் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி பொருள்களின் விலைகளில் மாற்றமில்லை. என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்க செயலர்,க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்
Loading posts...

All posts loaded

No more posts