- Thursday
- August 28th, 2025

எவராக இருப்பினும் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது என வட. மாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு...

யாழில் இடம்பெற்று வந்த பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் யாழ். நகர்பகுதியைச் சேர்ந்த தேவா, டானியல், சன்னா ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதங்களில் யாழில் நடைபெற்ற மிகப்பெரிய கொலை, கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸாரினால்...

காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர். காணாமலாக்கப்பட்டவர்கள் எந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் தெரியப்படுத்தினால் அங்கு தாம் அழைத்துச் செல்வதாக அண்மையில் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். அதனையே நானும்...

வெள்ளம் மற்றும் மண்சிரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 96 ஆகும். காயமடைந்தோர் 63 பேர் ஆகும். களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. 6 லட்சத்து 29 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க யாழ். மக்கள் முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும், அரிசி, சீனி, பருப்பு, பால்மா, மற்றும்...

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம், அடுத்த இரண்டு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன்...

தமிழினத்தின் வரலாற்றுப் பதிவுகளின் ஆதாரமாக, தலைநிமிர்ந்து மிடுக்குடன் காணப்பட்ட யாழ்.பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் ஆண்டுகள் 38. தெற்காசியாவின் மாபெரும் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்த யாழ்.பொது நூலகம், கடந்த 1981ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு எரியூட்டப்பட்டு, மறுநாள் அதாவது இதே போன்றதொரு நாளில் காலை வேளையில் நிறம் மாறி, உரு மாறி...

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்ல திரும்பச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று (29) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச...

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள தமிழ்மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை நேற்று நடாத்தியுள்ளது.
இதன் முதல் அமைர்வின் போது இந்த வழக்கின் முதல் ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில்...

புத்தூர் மேற்கில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பில் மல்லாகம் நீதிவான்...

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா (MORA) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள தாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோரா சூறாவளியானது தற்போது இந்தியாவின் கல்கத்தா (KOLKATA) நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 720 கிலோ மீற்றர் தூரத்திலும் வங்களாதேஷ் நாட்டின் சிட்டாகொங் (CHITTAGONG)...

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ்.மாவட்ட வானிலை...

நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 100 பேர்வரை உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தினால் 5 இலட்சத்திற்கும்...

காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை J/235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய 'ட்ரயல் அட்பார்' முறையில் இடம்பெறவுள்ளது. குறித்த மாணவி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், நீதிவான் நீதிமன்றத்தால் முடிவுறுத்தப்பட்டு, சட்டமா அதிபரால், ஒன்பது சந்தேகநபர்களுக்கும் எதிரான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய...

வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 93ம் அமர்வு நேற்று மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் குறித்த சம்பவத்திற்கு கண்டனத்தை...

யுத்தத்தின் பின்னர் அகதிகளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்குச் சொந்தமான தங்கம் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்த எவ்வித தகவல்களும் இல்லையென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் சொத்துக்கள் எங்கேனும் வைப்பீடு செய்யப்பட்டதா என, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த போதே, அமைச்சர்...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யுமாறு பொது பலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஞானசார தேரரை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில், கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த...

திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர். மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச்...

All posts loaded
No more posts