புங்குடுதீவு மாணவி படுகொலை தீர்ப்பாயம் கூடியுள்ளது

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (12) திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் எஸ்.குமாரரத்தினம் தீர்பாயத்தில் முன்னிலையாகி 9 சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றப் பத்திரிகையை தீர்பாயத்தில்...

அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை : வடக்கு மாகாண சபையின் அடுத்த நடவடிக்கை என்ன?

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் டான் தொலைக்காட்சியில் நேற்றய தினம் ஒளிபரப்பாகிய அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி
Ad Widget

யாழில் பெண்ணைத் தாக்கி பாரிய கொள்ளை

அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை (09) மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான ஸ்ரீமதி நடேசமூர்த்தி (வயது 59) என்ற...

காலையில் திறக்கப்பட்ட கதவு பகல்வேளையில் மூடப்பட்டது

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றுத் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது. வருடாந்த பொங்கல் உற்சவம் வழமைபோன்று இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வருகைதரும் பக்தர்களுக்குரிய போக்குவரத்துச்சேவைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன....

வடக்கு அமைச்சர்களின் விவகாரம் : தலையிடப்போவதில்லையென சம்பந்தன் அறிவிப்பு!

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் தான் தலையிடப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவானது விசாரணையின் அடிப்படையில் இரண்டு அமைச்சர்களை பதவி விலகுமாறு அல்லது பதவி விலக்குமாறு அறிக்கையிட்டிருந்தது. இந்நிலையில், இந்தப்...

குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட அமைச்சர்களும், வாக்குமூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்!

வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். நேற்றயதினம்...

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது: சம்பிக்க ரணவக்க

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்கரவாதம் பரவியுள்ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், நாடுகளில் தொடர்ச்சியாக...

வறட்சி தொடர்பில் விசேட கவனம் தேவை: இரா. சம்பந்தன்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கோரிக்கையை...

இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்க இராணுவம்: ஜனாதிபதி

அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவோர் இராணுவத்தை கொண்டு அடக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகிய தொடர்பிலான கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீடித்துவரும் இனவாத செயற்பாடுகளை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாது போனால், அதற்கு மாற்று நடவடிக்கையாக இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும்...

காங்கேசன்துறை மோசடி: கோட்டாபயவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மோசடி தொடர்பில் முன்னாள்...

இலங்கையில் சுனாமி அனர்த்தம் எதுவும் கிடையாது : வளி மண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் சுனாமி அல்லது சூறாவளி அனர்த்தம் எதுவும் கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கடல் நீர் தரைப் பிரதேசத்திற்குள் பிரவேசித்த காரணத்தினால் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சில தரப்பினர் பிரச்சாரம் செய்திருந்தனர். எனினும் இவ்வாறான எந்தவொரு ஆபத்து நிலைமைகளும்...

வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைக்குழு அறிக்கையை இன்றைய தினம் சபையில் சமர்ப்பித்து முதலமைச்சர் ஆற்றிய உரை

கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே! பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு...

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: இரா.சம்பந்தன்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்...

எதிர்கலத்தில் நாட்டிற்கு சுபீட்சத்தினை பெற்றுக் கொடுக்க பிரபாகரனே மீண்டும் வர வேண்டும் : அம்பிட்டியே சுமனரத்ன தேரர்!

யுத்த காலத்தை விட கிழக்கில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என கேள்வியெழுப்பியுள்ளார். அத்தோடு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சியில் தமிழ்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தலைவியிடம் புலனாய்வாளர்கள் விசாரணை!

‘கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தலைவி’ க.ஜெயவனிதா புலனாய்வுத்துறையினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 100 நாட்களை கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குறித்த சங்கத்தின் தலைவியின் காணாமல் போன மகள் ஜனாதிபதியுடன் நிற்பது போன்ற...

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை செய்திகள் தொடர்பில் யாழ்க்கோ நிறுவனம் விளக்கம்

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில்  ஊடகங்களில்  செய்திகள்  வெளிவந்திருந்தன. அச்செய்திகளில் யாழ்கோ நிறுவனம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் யாழ்க்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர்  இ.சர்வேஸ்வராவினால் விளக்க அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை வருமாறு.. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது நடாத்தப்பட்ட...

விடுதலைப் புலிகள் இயக்கத்தின்முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக கடமையாற்றிய சகல போராளிகளும் எந்தவித ஆயுத கலாசாரமற்ற ஜனநாயக ரீதியில் ஜனநாயகப் போராளிகளாக மீண்டும் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்க ஒரு குடையின் கீழ் அணி திரண்டு ஜனநாயகப் பயணத்தில் பங்கு கொள்ளுங்கள் என ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில்...

தமிழ் அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றி விட்டார்கள்: முள்ளிக்குளம் மக்கள்

தமிழ் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளிக்குளம் மக்கள் சார்பில் முள்ளிக்குளத்தை சேர்ந்த அந்தோனி லம்பட் மற்றும் அந்தோனி குறூஸ் என்ற இருவர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை ) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு...

யாழ். மாவட்டத்தில் வறட்சியால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தீவகப் பகுதிகளான வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை, கரம்பொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் வறட்சியினால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், நாளொன்றுக்கு...

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

வடக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கே.ஈ.ஆர்.எல் பெர்னாண்டோ காங்கேசன்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடனும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடனும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில், வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது...
Loading posts...

All posts loaded

No more posts