Ad Widget

சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி

இலங்கையில் சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டை விடவும், 2017ம் ஆண்டில் சீமெந்து விற்பனை 29 தசம் இரண்டு சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் சீமெந்து விற்பனை வீழ்ச்சியால், கட்டுமானத்துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

புதிய வாகனங்களின் விற்பனை பாரிய வீழ்ச்சி!

2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 320 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த வருடத்தில் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
Ad Widget

வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் உரிய வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அறிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை குறைப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைப்பதோடு வினைத்திறனான சேவையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இதன்மூலம கிடைக்கும்.

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு...

பிரமிட்முறை வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு இடைக்காலத்தடை!

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது. குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட போதே நீதிபதி இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்தார். மேலும் குறித்த நிறுவனத்தின் வர்த்தக...

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவித்தல்!

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டார். அந்தவகையில், இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு...

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை சத்தோச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய இந்த புதிய விலைக்கு கடந்த 2ம் திகதி முதல் சத்தோச நிறுவன விற்பனை கிளைகளில் பின்வரும் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்: சம்பா அரிசி ஒரு கிலோ ரூபா 78.00 நாட்டரிசி ஒரு கிலோ ரூபா 74.00 வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ ரூபா 65.00 சிவப்பு...

பெட்ரோல், டீசலின் விலையில் அதிரடி மாற்றம்!

கனியவள கூட்டுத்தாபனம் எதிர்வரும் தினத்தில் எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய நிலையில் , கனியவள கூட்டுத்தாபனத்தின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு எதிர்வரும் தேர்தல் மற்றும் பாதீட்டை இலக்காக வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 26ம் திகதி கனியவள கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது , கனியவள கூட்டுத்தாபனத்தின் ஓகஸ்ட் மாத இலாபம் 7 ஆயிரத்து 729 மில்லியன்...

முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனம்

முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனமொன்றை இந்நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எம்.கே. ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைந்த முச்சக்கரவண்டியில் மூலம் ஏற்படும் விபத்துக்களால் வருடாந்த பல உயிர்கள் இல்லாமல் போவதுடன் பலர் அங்கவீனர்களாக ஆகுவதைத் தடுக்கும் நோக்கில் அதற்கு மாற்றீடாக இந்த நான்கு சக்கர வாகனத்தை...

அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம்...

“சதொச “வில், அரிசி தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில்!

சதொச நிறுவனம் தற்சமயம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதனால் இதனால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச நிலையங்களுக்கு செல்வதாக சதோசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இதேவேனை சிறு வர்த்தகர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொவித்த அவர் 25 மாவட்டங்களிலுள்ள 28 மத்திய நிலையங்களில் சிறு வர்த்தகர்களுக்கு...

இன்று முதல் 65 ரூபாவுக்கு தேங்காய் விநியோகம்: அரசாங்கம் நடவடிக்கை

அரச தோட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தேங்காய்களை இன்று முதல் (02) 65 ரூபா சில்லறை விலைக்கு சந்தைப்படுத்த தெங்கு உற்பத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. சிறியளவிலான தெங்கு உற்பத்தியாளர்களினது தேங்காய்களும் இவ்வாறு குறைந்த விலையில் சந்தைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை, நகர்ப் பகுதிகளிலும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள...

சகல கடைகளிலும் இனி பியர், வைன் வாங்கலாம்!!

உயர் ரக மதுபான வகைகளாக கருதப்படும் வைன் மற்றும் பியர் என்பவற்றை விநியோகத்துக்கான அனுமதிப் பத்திரத்தின் சட்ட திட்டங்களை இலகுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறை மாவட்ட பாராளுமன்ற...

உணவுப் பொதியின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலித்தீன் பாவனை அண்மையில் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தடை சட்டம் நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தால் அரிசியின் விலை உயர்வு!

கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வர்த்தகர்கள் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த வியாபாரத்தில் அரிசிக்கான மொத்த விற்பனை விலை 75 தொடக்கம் 92 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நாடு, பொன்னி, வெள்ளை அரிசி முறையே 65,75,80 ரூபாவாகவும், உள்நாட்டு சிவப்பரிசி 78 ரூபாவாகவும் சம்பா 92 ரூபாவாகவும்...

அனைவருக்கும் 10%போனஸ் Dataவினை வழங்க அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களும் தீர்மானம்!!

இணைய பக்கேஜ்களுக்கு 10% போனஸினை வழங்குவதற்கு அனைத்து தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்களும் தீர்மானித்துள்ளனர். 2017 ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி இணைய பக்கேஜ்கள் /அட்டைகளுக்கான தொலைத்தொடர்புகளுக்கான வரியானது குறைக்கப்பட்டமையினால் அனைத்து மொபைல் மற்றும் fixed line வாடிக்கையாளர்களுக்கு 10%போனஸ் Dataவினை அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.அரசாங்கத்தினால் இணைய பக்கேஜ்களுக்கான தொலைத்தொடர்புவரியானது அகற்றப்பட்டமையானது...

அகற்றப்பட்ட கடைகளுக்கு நீதி கோரி சட்டத்தின் எல்லைவரையிலும் சென்று நீதி கேட்போம் : சட்டத்தரணி கே.சுகாஸ்

யாழ்.நகரில் அகற்றப்பட்ட கடைகளுக்கு நீதி கோரி இலங்கையில் எத்தனை சட்ட எல்லை வரை செல்ல முடியுமோ அதுவரை சென்று நீதி கேட்போம். என சட்டத்தரணி கே.சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில், அமைக்கப்பட்டு இருந்த 9 கடைகளை கொண்ட கடைத்தொகுதி யாழ்.நீதவான் நீதிமன்றினால் அகற்ற உத்தரவு இடப்பட்டு இருந்தது....

யாழில் அகற்றப்படும் கடைகள்!

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 09 கடைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று (புதன்கிழமை) அகற்றப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதியே நேற்றய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தாம் கடன்களை பெற்று...

சீனிக்கான விசேட இறக்குமதி வரி 8 ரூபாவினால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்காக அறவிடப்படும் விசேட இறக்குமதி வரி 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (16) முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதை அடுத்து,சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. சீனிக்கான...

யாழ். நகர நடைபாதை வியாபாரிகளுக்கான கடைத்தொகுதிகள் திறந்து வைப்பு!

யாழ். நகர நடைபாதை வியாபாரிகளின் நலன்கருதி அமைக்கப்பட்ட கடைத்தொகுதிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் கோரிக்கைக்கமைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான காணியில் 76 கடைத்தொகுதிகளை கொண்டதாக இந்த நகர மத்தி கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட அரச...
Loading posts...

All posts loaded

No more posts