- Friday
- March 29th, 2024
வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 155 ரூபாவைத் தாண்டியுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக...
கடன் அட்டைகளுக்காக அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தினை, மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை வணிக வங்கி மேற்கொண்டுள்ளது. இதனால் வருடாந்தம் நூற்றுக்கு 24 வீதமாக்கப்பட்டிருந்த வட்டி வீதம், எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி முதல் 28 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
சீனிக்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டாலும், அதற்கேற்றவாறு சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க மாட்டாது. இதனை சீனி இறக்குமதியாளர் சங்கம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் சந்தையில் சீனியின் சில்லறை விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது. எவரேனும் போலியாக சீனியின் விலையை அதிகரிக்கும் பட்சத்தில்...
தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையால், தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். புதிய விலை திருத்தத்திற்கு அமைய...
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு 10 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்றில் கூடிய வாழ்க்கைச் செலவு குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....
CTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் NCIT யினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள மேற்படி நிகழ்வில் இணையம் , மென்பொருள், இணைய வடிவமைப்பு , மொபைல் அப்ஸ், இலத்திரனியல் தகவல் பாதுகாப்பு , நெற்வேக்கிங் , இலத்திரனியல் சந்தைப்படுத்தல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதுதொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் நிறுவனங்கள்...
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய வங்கி முன்வந்துள்ளது. இதன்காரணமாக ரூபாயின் பெறுமதி பொதுவான நிலைக்கு வந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள்...
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக உள்ளூர் மரக்கறிகளின் உற்பத்தி குறைவடைந்து வருவதால், யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன என்று, சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் மலிந்த நிலையில் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள், இந்த வாரத்தில் மூன்று, நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளன. முன்னர் 40 ரூபாய்க்கு...
பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, வௌியான தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய புறக்கோட்டை பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது, அங்கிருந்த வர்த்தகர்களிடம் அமைச்சர் விசாரணை...
உள்ளூர்ச் சந்தையில் தேங்காயின் விலை, என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் தேங்காய் ஒன்றின் விலை, 90 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. எனினும், ஹெக்டர்கொப்பேகடுவ விவசாயம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விடுத்துள்ள புள்ளிவிவரத்தின் பிரகாரம், பெரிய தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. சிறிய தேங்காய் ஒன்றின்...
வீடுகளில் சூரிய மின்கலத் தொகுதிகளை அமைக்க குறைந்த வட்டியில் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக வங்கிகளில் ஒன்றரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் ரூபா வரையிலான தொகையை கடனாகப் பெறலாம். இதற்குரிய வட்டியில் 50 சதவீத சலுகையை மின்...
இன்றைய தினம் முதல் நிதிக் கொள்கை பரிசீலனைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி நிலையான வைப்பு வசதிக்கான வட்டி கட்டணம் (SDFR) 7% இல் இருந்து 7.25% ஆகவும், நிலையான கடன் வசதி வட்டி கட்டணம் (SLFR) 8.50% இல் இருந்து 8.75% ஆகவும்...
யாழ்ப்பாணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் என்பன அதிகூடிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தேங்காய் ஒன்று 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் வரட்சியான காலநிலை நிலவுவதுடன், ஒருவகை வைரஸ் காய்ச்சலும் பரவி வருகின்றது....
வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு குழுவில் குறித்த இரண்டு பொருட்கள் தொடர்பிலும் நுகர்வோரின் தேவைப்பாடு, இறக்குமதி விலை மற்றும் சந்தை விலை போன்றவற்றை கருத்தில் கொண்டு...
நாட்டுக்குள் பாரியளவிலான சீனி பதுக்கல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக, சீனி ஒரு கிலோகிராமின் விலை 110 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளதென, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது. விற்பனை நிலையங்களில் தேடிப் பார்த்தமைக்கு அமைய, சீனியின் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக, சீனி ஒரு கிலோகிராமுக்கான மொத்த விற்பனை விலை, 93 -...
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு, அரசாங்கம் சம்மதித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவுச் செயற்குழுவே, இந்த முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளரொருவர், சீனிக்கான சில்லறை விலையாக, 93 ரூபாயைக் கட்டுப்பாட்டு...
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து பணத்தை அபகரிப்பதாக வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த காரில் நடமாடும் இரு...
விவசாயிகள் கூடுதலான வருமானத்தைக் கருத்திற்கொண்டு, கீரி சம்பா போன்ற நெல் வகைகளை கூடுதலாக உற்பத்தி செய்ததனால் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் குறித்து விபரிக்கையிலேயே நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் பாலித பண்டார பிரதிப் பொது முகாமையாளர்...
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 153.44 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 149 ரூபா 68 சதமாக காணப்படுகின்றது. டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி இவ்வளவு கீழ் நோக்கிச் சென்றுள்ளது இதுவே முதல்தடவை...
Loading posts...
All posts loaded
No more posts