Ad Widget

இரு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை மாற்றமடையும்: மங்கள

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, எரிபொருளின் விலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி எரிபொருள் விலை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடவோ அல்லது குறையவோ முடியும் என்றும் தெரிவித்தார்....

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலை அதிகரிப்பு!!

கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த கூட்டுத்தாபனத்தில் நிலவும் நிதிநெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய... 92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா, 95 பெற்றோல் ஒரு...
Ad Widget

பருப்பிற்கு வரி அதிகரிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையும் பிரிக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பிற்கு 3 ரூபாவாக காணப்பட்டது. அது 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிரிக்கப்படாத ஒரு கிலோ கிராம் பருப்பிற்கான வரி 7 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த புதிய வரி நேற்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்குமென, நிதி...

யாழ்ப்பாணத் தயாரிப்பு கார்களின் கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ்கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர்  K.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற...

பால்மாவிற்கான புதிய விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பால்மாவிற்கான புதிய விலை, மே மாதம் 5ஆம் திகதி முதல் உற்பத்திசெய்யப்படும் பால்மாவிற்கே பொருந்தும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. ஆனால், கையிருப்பிலுள்ள பால்மாவை புதிய விலைக்கு விற்பனை செய்வோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்...

பெற்றோல், டிசல் விலை அதிகரிப்பு?

பெற்றோலின் விலையை 20 ரூபாவாலும் டிசலின் விலையை 12 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக விலை சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விலைச்சூத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட போதும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. வரும் செவ்வாய்கிழமை ஒப்புதலளிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோலின் விலையை 15 ரூபாவாலும் டிசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதலளிக்கும் என நிதி...

பால்மாவின் விலையை அதிகரிக்க அனுமதி

இறக்குமதியாகும் பால்மாவின் 400 கிராம் பக்கற்றுன் விலையை 20 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அனுமதியளித்துள்ளது. அத்துடன் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வணிக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார். இதேவேளை, பால்மா வகைகளின் விலையை...

வெங்காயம், உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால்மா இறக்குமதி இடைநிறுத்தம்

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளதால் அதன் இறக்குமதியை தற்போது இடைநிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால்மாவின் விலை 3,250 இருந்து 3,350 அமெரிக்க டொலர்களாகும், ஆனால் அடுத்த ஜூன் மாதம் வரை 3,400 இருந்து 3,500 அமெரிக்க டொலர்களாக உயர்வடைய கூடும், என்பதனால் இறக்குமதி தடைபட்டுள்ளதாக அவர்கள்...

சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை நேற்று (27) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அதன் விநியோகஸ்தர்களாக லிப்ரோ மற்றும் லாவ்ப் காஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 1431...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை ரூபாவின் இந்த பெறுமதி வீழ்ச்சி வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளதுடன்,...

நாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு!

நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு 2.5kg, 12.5kg மற்றும் 12.5kg மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் சமையல் எரிவாயு...

யாழ் மீனவருக்கு சிக்கிய ஒன்றரை கோடி பெறுமதியான மீன்கள்!

யாழ் .வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு, சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே, நேற்று (செவ்வாய்க்கிழமை) 20 ஆயிரம் கிலோவிற்கும் அதிமான மீன்கள் சிக்கியுள்ளன. குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள்...

வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு தடை

சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் உள்ளிட்ட வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதனையும் இவ் எல்லையினுள் நடைபாதை வியாபார நடவடிக்கையினையும் தடை செய்யவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அனைவரின் ஒத்துழைப்புடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கன்னியமர்வு கடந்த...

நுண்கடன் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க விசேட திட்டம் – ஆறு மாத்திற்கு கடனை செலுத்த வேணடாம்!!

நுண் கடன்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விசேட செயற்திட்டம் ஒரு மாத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும், இதேவேளை வரும் ஆறு மாத்திற்குள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்ததேவையில்லை எனவும், இதனை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரத்துங்க தெரிவித்துள்ளார். நேற்று (03) கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு...

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்!

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58...

வியாபாரிகளுக்கான காலாண்டு வரி அறவிட நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில், வருடம் ஒன்றுக்கு, 12 மில்லியன் ரூபாய் வரையில் வியாபாரத்தை மேற்கொள்ளும் நபர்களின் காலாண்டு வரி அறவிடுதல் தொடர்பான ஆரம்பக் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதிப் பிரதம செயலாளரின் நிதிப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வரி என்பது மக்களின் தேவைகளை முழுமை செய்யும்...

இன்று முதல் புகையிலை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனைக்கு தடை!

வவுனியா - சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளது.குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி இதனை ஒத்திகை பார்க்கும்...

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கவும்!!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் துறைகளில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் இழப்பின்றி இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது...

யாழில் தனியார் ஊழியர்கள் சங்கம் உருவாக்கம்!! : அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் அழைப்பு!!

யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். ஆரம்ப நிகழ்வு வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நீதிமன்றத்துக்கு அண்மையிலுள்ள ஒமேகா இன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. “தனியார் துறை ஊழியர்களாகிய நாம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார...
Loading posts...

All posts loaded

No more posts