Ad Widget

இன்றுமுதல் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்ய முடியாது

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக கூறினார். அத்துடன், புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும்...

புத்தாண்டன்று ‪யாழ் மக்களை சுட்டெரிக்க போகின்கிறது வெய்யில்‬!!

‎வெப்பத்தின் கொடுமை இப்பொழுதே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புத்தாண்டன்றும் மறுநாளும் தற்போதுள்ள வெப்ப நிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று ‪#‎யாழ்‬.‪#‎திருநெல்வேலியியுள்ள‬ வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன்‬ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சிறு மழை பெய்ய வாய்ப்புள்ள போதும் அதனைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து...
Ad Widget

பஸ் கட்டணத்தை கூட்டி அறவிட முடிவு

தமிழ்-சிங்கள புத்தாண்டு சேவையில் 3,000 பஸ்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அந்த பஸ்கள் யாவும், 8ஆம் திகதிமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 25ஆம் திகதி வரையிலும் ஈடுபடுத்தப்படும் இந்த விசேட பஸ் சேவையின் போது, பயணிகளிடமிருந்து அறவிடும் பஸ் கட்டணத்தை ஒன்றரை மடங்காக அதிகரித்து அறவிடுவதற்கு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இந்த...

யாழ். குடாநாட்டு கோவில்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்த இடைக்காலத் தடை!

யாழ். குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை...

அரசு கொடுக்கும் உருக்கு வீடுகள் பொருத்தமானவையா? கொழும்பில் இன்று கலந்தாய்வு

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ள 65,000 உருக்கு வீடுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் வீடமைப்புத் திட்டம் ஒன்றினை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகள் முன்னரே தயாரிக்கப்பட்ட உருக்கு, பிளாஸ்டிக்...

பொருத்து வீடுகள் தொடர்பில் மக்களிடம் அபிப்பிராயம்!

வடக்கில் அமைக்கப்படவுள்ள 65,000 வீடுகள் தொடர்பில் மக்களிடம் கருத்தறியும் செயற்பாடொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு முன்னால் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பதில் மக்கள் தமக்குரிய அபிப்பிராயங்கள் மற்றும் குறைகள் தொடர்பில் எழுதிப் போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட பொருத்துவீடுகளை விரும்...

கர்ப்பிணிகளே கவனம்

நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வெப்பநிலை காரணமாக கர்ப்பிணிகள், சுத்தமான தண்ணீரை அடிக்கடி பருகவேண்டும் என்று மகப்பேற்றியல் மற்றும் குழந்தை நல வைத்திய நிபுணர் ருவன் சில்வா தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் வெப்பநிலை சாதாரணமாக 37.5 செல்சியஸ் பாகையாகும். அந்த வெப்பநிலை, 38 செல்சியஸ் பாகையாகவோ அல்லது அதற்கு மேல் கூடினாலோ, கர்ப்பப் பையில்...

வழமைக்கு மாறான உஷ்ணம்: வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கடந்த...

தீர்வுத் திட்ட முன்வரைபு ‍தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் அமர்வு கொழும்பில்

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ்...

வெப்பமான காலநிலை : குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பரவும் தோல் நோய் தொடர்பில், ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுஜீவ அமரசேன விளக்கம் அளித்துள்ளார். இந்த காலப்பகுதியில் குழந்தைகள் உடலில் வியர்கூறு ஏற்பட கூடிய ஒருவகை நோய் பரவி வருகிறது.இதற்கு கிரீம் போன்றவை பயன்படுத்துவதால் பயன் ஏதும் இல்லை.இவை இரண்டு அல்லது...

உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாமென எச்சரிக்கை!

தற்போது நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாம் எனவும் இக்காலநிலையானது இன்னு சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் காலநிலை மத்திய ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பகல் பொழுதுகளில் நீங்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என எண்ணினால் அதற்கு வெப்பதிலிருந்து பாதுகாப்புத் தேவை என மருத்துவ அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வெப்பமானது குழந்தைகளின் இதயம்...

இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்காக தொலைபேசி இலக்கம்

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 003223445585 அல்லது 0032471872745 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நிகழ்ந்த...

வீடமைப்பு உதவி – விண்ணப்பங்களைக் கோருகிறது புனர்வாழ்வு அமைச்சு!

யுத்தத்தால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் 65,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக் கொள்ள புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. காணி உறுதிப்பத்திரம், அரசாங்க காணி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பத்து வருடங்களுக்கு மேல் ஒரு காணியில் வசிப்பவர்களும் இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என...

மக்களை ஏமாற்றும் மோசடிக்கும்பல்

மலேஷிய உட்பட வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெறும் மோசடிக்கும்பள்களிடம் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு மலேஷியாவில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றிய இருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும்...

தகவல் கிடைத்தால் உடன் நடவடிக்கை எடுக்க முடியும்

'யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் வன்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு அல்லது தகவல்கள் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்' என யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று செவ்வாய்க்கிழமை (15) நடத்திய ஊடகவியலாளர்...

கண்பிரச்சினைகள் தொடர்பில் நேரத்துடன் பரிசோதனை

கண் பிரச்சினைகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் உரிய நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்புடன் இருக்கலாம் என சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கண் நோய்கள் தொடர்பில் அண்மையில் சுகாதார அமைச்சினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நமது நாட்டிலுள்ள சுமார் 1.7 சதவீதமானோர்கள் பார்வையற்றவர்களாகவுள்ளனர் என 2014/2015 ஆம் ஆண்டுக்கான சுகாதார...

பிரபல சுவையூட்டியை சந்தையில் இருந்து நீக்க முடிவு

உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தேசிய, சமூக வீடியோ கதையாக்கப் போட்டி – 2016

இலங்கையில் முதல் தடவையாக தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டியொன்றை நடத்த இலங்கை அபிவிருத்தி ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது. நோக்கம் பிரதான நிலை ஊடகங்களில் தமது குரலுக்கான உரிய இடமும் பிரதிநிதித்துவமும் கிடைக்காத மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை ஒரே நிமிடத்தில் வீடியோ கதையாக சித்திரிக்கும் இளைஞர் யுவதிகளை அடயாளம் காண்பது இப்போட்டியின் நோக்கமாகும். சமூக ஊடகத்தில்...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு புலம்பெயர் உறவுகளுக்கு பகிரங்க அழைப்பு

தமிழ்மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டமுன் வரைபு தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங் களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டுவருவதும் இதில் மக்கள் மிகவும் உற்சாகத்துடன்...

நகுலேஸ்வரம் வரை பஸ் சேவை நீடிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் வரையில் இடம்பெற்று வந்த 769 ஆம் இலக்க பஸ் சேவையானது, நேற்று வெள்ளிக்கிழமை (04) முதல் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய முன்றல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரத்தின் திருவிழா கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இனிவரும் நாட்களில் ஆலயத்தின் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவுள்ளமையால், ஆலயத்துக்கு...
Loading posts...

All posts loaded

No more posts