குரு பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் பலன்கள்!

நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!! வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான்...

இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிப்பு!

போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்புக்களுக்கமைய பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தது. இதற்கமைய, இன்றுமுதல் ஆரம்பக் கட்டணமாக 9.00 ரூபா அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ரூபா கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதுடன் ஏனைய...
Ad Widget

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் தனியாரிடம் இரத்தப் பரிசோதனை செய்ய தடை

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புவது முழுமையாக தடைசெய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுல்படுத்தப்படும். குறித்த தினத்திலிருந்து சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

ரயில் குற்றங்களுக்கான அபராத தொகை அதிகரிப்பு?

ரயில் பயணத்தில் இழைக்கப்படும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க ரயில் திணைக்களம் தயாராகியுள்ளது. அதற்கமைய, அபராத தொகையை 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிதிபலகையில் பயணம் செய்வது, ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அதில் உள்நுழைவது, ரயிலில் மதுபானம் அருந்துதல், தவறான வழியில் மற்ற பயணிகளை தள்ளிக்கொண்டு வருவது போன்ற குற்றங்களுக்காக அபராதத் தொகையே...

பாலியல் குற்றம் புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்!

பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த...

உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான எச்சரிக்கை!

க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையின் போது பரீட்­சார்த்­திகள் பரீட்சை மண்­ட­பத்­திற்குள் கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்துச் செல்­வது முற்­றாகத் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக இலங்கைப் பரீட்சைத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்தின் பிரதிப் பரீட்சை ஆணை­யாளர் எஸ்.பிர­ண­வ­தாஸன் தகவல் தரு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், எதிர்­வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி க.பொ.த. உயர்­தரப் பரீட்சை...

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகமா? உடன் அறிவியுங்கள்

இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அல்லது வேறு துஷ்பிரயோகங்கள் குறித்து, முறையிட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 077 32 20 032 என்ற கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பதன் மூலமோ, குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ...

‘இணையத்தள அடிமைகளும் மனநோயாளர்களே’

'இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும்' என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்'...

தனியார் துறையினருக்குரிய வேதனம் 2500ரூபா உயர்த்தாவிட்டால் முறையிடலாம்!

வரவு செலவுத் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத வேதனத்தில் 2500 ரூபா அதிகரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2500 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றதா என ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் பி.எஸ்.பத்திரன தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத் திணைக்களத்தினால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த 2500ரூபா வேதன...

யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் 24 மணித்தியால தொடர்பிலக்கங்கள் அறிவிப்பு

மாநகர சபையின் தீயணைப்புச் சேவையைப் பெறுவதற்கான தொடர்பு இலக்கங்களை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி தீவிபத்து ஏற்படும் பட்சத்தில்,0213207777 மற்றும் 0777040126 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். குறித்த சேவை 24 மணித்தியால சேவையாகும். தீ விபத்து ஏற்பட்டு பரவ முன்பதாக ஆரம்ப நிலையிலேயே அறிவித்தால்...

கைத் தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!

கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் நிலையங்களுக்கு முற்றுகையிடவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன் எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும்...

இன்றிலிருந்து 4 நாட்களுக்கு கடும் மழை

இன்று வியாழக்கிழமை (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையான நாட்களில் நாடு முழுவதும் கடும் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்யலாம் எனவும் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்!

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திப் பொருட்கள் அனைத்தினதும் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது எனத வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். வெதுப்பக உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பாம் எண்ணெய், மாஜரின், உப்பு, சீனி என்பவற்றின் விலை 20 வீதத்தால் உயர்ந்துள்ளது. இது குறித்து அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதன் பின்னர் விலை அதிகரிப்பது குறித்துத்...

வன்னியில் அழிந்த வாகனங்களுக்கு இழப்பீடு மறுப்பு!! பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அழைப்பு

வன்னி இறுதி யுத்தத்தில் அழிந்து போயுள்ள வாகனங்களுக்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பல, முள்ளிவாய்க்கால் வரை சென்றிருந்த நிலையில், உரிமையாளர்களால் கைவிடப்பட்டிருந்ததுடன், அவர்களும் முற்றாக வெளியேறியிருந்தனர். பின்னர், அவை அனைத்துமே காணாமலும் எரியுண்டு அழிந்தும் போயிருந்தன. இந்நிலையில், தமது வாகனங்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பனவுகளை...

ஊடகவியலாளர்களுக்கு முழுநாள் செயலமர்வு

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இதில் பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் tmailmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு தங்களுடைய விபரங்களுடன்...

யாழிலிருந்து கதிர்காமம் செல்ல விசேட பஸ் சேவை

கதிர்காமம் ஆலயததுக்குச் செல்ல, இலங்கை போக்குவரத்துச் சபையினால், விசேட பஸ் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் தெவித்தார். கதிர்காமக் கந்தன் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 18, 19, 20ஆம் திகதிகளில், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, கதிர்காமம் நோக்கிப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப விசேட...

சிறுநீரக நோயாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 1,000 குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்துக்கமைய, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் இந்நோயினால்...

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இப்பயிற்சி...

வாடகை வீடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும்- தேர்தல் ஆணையாளர்

வாடகை விடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வீடுகளில் தங்கியிருப்பவர்களும் குறித்த முகவரிகளின் கீழ் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்....

அரச வைத்தியர்கள் சங்கம் திங்களன்று பணிப்பகிஷ்கரிப்பு

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி சட்டரீதியான அந்தஸ்தை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் சங்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் பணிபுரியும்...
Loading posts...

All posts loaded

No more posts