Ad Widget

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் நாளை பத்தரமுல்லைக்கு மாற்றம்

மருதானையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை விடுமுறை விடப்படவுள்ளதாகவும் இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related Posts