ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன் எப். கென்னடி விமான நிலையத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 71 வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த எவரும்...

இன்று வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

இன்றைய தினம் பரந்தளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரை 4 மணித்தியாலங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு...
Ad Widget

பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகள் விசேட அனுமதிப் பத்திரம் ஜூலை 0 1 முதல் கட்டாயம்

பயணிகள் போக்குவரத்து பஸ்களில் சாரதிகளாக உள்ளவர்கள் பயணிகள் தொடர்பாக போக்குவரத்து திணைக்களத்தினால் பயிற்சியின் பின் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயம் எனவும், இது தொடர்பான சட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இவ்வருடத்தில் புதிதாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்...

தரமான தலைக்கவசம் அணியும் சட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுல்

மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கான தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய தலைக்கவசம் அணியும் சட்டம் எதிர்வரும் ஏப்றல் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை தரப்படுத்தும் நிறுவனமும், நுகர்வோர் அதிகார சபையும் இந்த பணிக்கு...

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டி புதிய சட்டங்கள் அமுல்

இதுவரையில் முச்சக்கர வண்டி தொடர்பில் அறிமுகம் செய்துவந்த புதிய சட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் மேற்படி திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அறிமுகமாகியுள்ள புதிய சட்டதிட்டங்களின் படி, அனைத்து...

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதியிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து திணைக்களம் இன்று அதிகாலை 5.30க்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் : சில இடங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழையின்போது வலுவான காற்றும் வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள்...

இன்றும் நாளையும் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 48 மணித்தியாலத்துக்குள் வடக்கு, கிழக்கு உட்பட வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட...

 31ஆம் திகதி “ட்ரோன்“ பயிற்சி

ட்​ரோன் புகைப்படக் கருவியை பயன்படுத்தும் போது, கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வை அரச தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வு அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 31ஆம் திகதி,முழுநேர செயலமர்வாக நடைபெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊடக வர்த்தகம் மற்றும்...

வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல் கலப்பற்ற விதத்தில் இளைஞர்களின் ஆதரவு போராட்டத்துக்கான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நாளை (26.01.2017) வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமை 27.01.2017 அன்று காலை 9 மணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் வவுனியா விஜயம் செய்யப்பட்டு உண்ணாவிரத...

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள்

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர். களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் தரகர்கள் மூலம் புளக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது குறித்து மிக விழிப்புடன் செயற்படுமாறு,...

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க திட்டம்

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமான வரி...

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி...

இனி வாகன ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்த முடியாது

வாகனங்களின் முன் வாயில் ஜன்னல்களில் உள்ளிருப்பவர்களை மறைக்கும் வகையிலான திரைச்சீலைகள் (curtains) அல்லது கறுப்பு நிற ஸ்டிக்கர்கள் (tints) போன்ற திரைகளை இடும் நபர்களுக்கு எதிரான சட்டம் இன்றும் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. யாழ். நல்லூரில் நேற்றுமாலை ஆயிரக்கணக்கான...

எழுக தமிழ் பிற்போடப்பட்டது

மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில்...

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! நல்லூரில் அணிதிரள அழைப்பு!

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை நேற்று காலை பொலிஸார் கைது செய்தனர். இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய்....

குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்

நிலவிவரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குடி நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில், பவுசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடி நீர் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை...

கடுமையான வரட்சி : A/C பாவனைக்கு சுற்றறிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியை எதிர்கொள்ளும் நோக்கிலும், மின்பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், அரச அலுவலகங்களிலுள்ள (A/C) பாவனையை, குறைத்துக்கொள்ளுமாறு கோரி, சுற்றறிக்கையொன்றை வெளியிடப்படவுள்ளது. இந்தச் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச ஊழியர்கள், A/C யினை 26 பாகை செல்சியஸுக்கு மேல் வைத்து பயன்படுத்துமாறும் குறிப்பிடப்படும் என்றும், எரிபொருள் மற்றும்...

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய ஒழுங்கு விதிகள் : வர்த்தமானி வெளியாகின

பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் விசேட ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன். கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் பற்றுசீட்டு வழங்குவது சாரதியின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வலது பக்கத்தால் உள்நுழைய முடியாமல் முற்றாக அல்லது பகுதி அளவு...

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முழுவதிலும் நிலவும் வறட்சியான காலநிலையால், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக, தொடர்ந்து நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி முக்கியமான தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts