தலைக்கவசம் அணிவது தொடர்பான முக்கிய 10 விடயங்கள் வர்த்தமானியில்

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் முறை தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று (23) இரவு வௌிடைப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் போது பின்பற்ற ​வேண்டிய 10 விடயங்கள் தொடர்பில் இந்த...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை, கருத்திற் கொண்டு இந்தமுறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின்...
Ad Widget

யாழ் பல்கலைக்கழ கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான அறிவித்தல்

கலைப் பீடத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2015/2016 ஆம் கல்வி ஆண்டுக்குரிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 01.03.2017 புதன்கிழமை காலை ஆரம்பமாகும் என்று கலைப்பீடாதிபதி கலாநிதி கருணாகரன் சுதாகர் தெரிவித்துள்ளார். இதன்படி கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 01.03.2017 புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் அறிமுக ஆரம்ப...

அரிசி தொடர்பான மோசடிகளை 1977 எனும் எண்ணுக்கு அறிவிக்கவும்

அரிசி பதுக்கி வைத்தல், அரசின் கட்டுப்பட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்தல் மற்றும் இரசாயன கலவை அடங்கிய அரிசி விற்பனை செய்தல் போன்ற மேசடிகள் தொடர்பில் 1977 எனும் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குறித்த இலக்கம் காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குமென அவர்...

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில்!

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்றது. 2012ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பினை நிறைவு செய்து பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கான உரிய வேலைகள் கிடைக்காததை கண்டித்தும், தொண்டர்...

வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய...

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் வெளியீடு!

இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டு அரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், உள்நாட்டு உற்பத்தி அரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாவாகவும், உள்நாட்டு பச்சை அரிசி ஒரு...

மின்சாரத்தை சிக்கனப்படுத்தினால் மின்கட்டணத்தில் கழிவு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோருக்கு மேலும் சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மின்சார சபைக்கு வழங்கும் உதவி என்னவென்றால், வழமையை விட ஒரு மின்விளக்கை அணைத்து வைப்பதாகும். டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாத மின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக் கொள்பவர்களுக்கும், ஜனவரியை விட பெப்ருவரி மாதத்தின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக்...

வடக்கில் காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய அஞ்சும் மக்கள்!

வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த இரண்டு முறைப்பாடுகளும் காணி தொடர்பான பிரச்சினைகளில் காவல்துறையினர் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் ஆகும். இதில் ஒரு முறைப்பாடு...

மாற்றப்பட்ட காலாவதி திகதிகள்

நுகர்வோரை ஏமாற்றும் வகையில் காலாவதி திகதியை மாற்றி விற்பனை செய்த பிரபல நிறுவனத்தின் பொருட்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார். . யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் தேடுதல் நடத்திய வேளை மரக்கறி விதைகளை கொண்ட ரின்கள்...

வீதிகளில் நாய்களை விடுபவர்களுக்கு எதிராக அதிரடி சட்டம்

வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை...

7 போக்குவரத்துக் குற்றங்களுக்கான 25000 ரூபா தண்டப்பண அறிக்கை 2 வாரத்தில்

போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்காக 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்ட மூலத்தின், மீளமைக்கப்பட்ட அறிக்கை இன்னும் இரு வாரங்களில் தயாரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 7 போக்குவரத்துக் குற்றச் செயல்களுக்காக இந்த தண்டப்பணம் அறவிடப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தண்டப் பணம் சீர்திருத்தம் செய்ய நியமிக்கப்பட்ட...

சிரேஷ்ட பிரஜைகளின் விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு

நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை 10 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2017 வரவு செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்ட குறித்த யோசனை மார்ச் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடல்

பட்டதாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடலொன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இதன்போது, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் துஷாந்தன் தெரிவித்துள்ளார். காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த கலந்துரையாடலில், வடமாகாண...

ச.தொ.ச. வில் அரிசி ஒரு கிலோ 66 ரூபா!

நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச. கிளைகளில் ஒரு கிலோ அரிசியை 66 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ரீதியிலுள்ள 340 கிளைகளில் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பவற்றை 66.00 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட...

அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது!

மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில்...

ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன் எப். கென்னடி விமான நிலையத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 71 வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த எவரும்...

இன்று வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

இன்றைய தினம் பரந்தளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரை 4 மணித்தியாலங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு...

பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகள் விசேட அனுமதிப் பத்திரம் ஜூலை 0 1 முதல் கட்டாயம்

பயணிகள் போக்குவரத்து பஸ்களில் சாரதிகளாக உள்ளவர்கள் பயணிகள் தொடர்பாக போக்குவரத்து திணைக்களத்தினால் பயிற்சியின் பின் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயம் எனவும், இது தொடர்பான சட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இவ்வருடத்தில் புதிதாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்...
Loading posts...

All posts loaded

No more posts