Ad Widget

காணாமல்போனோரை கண்டறிய உதவி கோரல்

சவூதி அரேபியா, லெபனான் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்று காணாமல் போன இலங்கையர்கள் ஐவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவதற்காக, மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதுவரை எவ்விதத் தகவல்களும் இல்லாத இந்நபர்கள் தொடர்பில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், காணாமல் போனவர்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இவர்களின் தகவல் தெரியும் என்றால், பணியகத்தின் வெளிநாட்டு தொடர்புப் பிரிவின் 011 4379328 / 011 2864136 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் விவரம் வருமாறு,
1. எம்.எம்.எம்.பாத்திமா: 575/ குடாகம 8, புதிய நகரம், வீரவில
2. ஐ.கே.இத்திரானி: அகதி முகாம், மூதூர்
3. எஸ்.மங்களேஷ்வரி: 190 மடுகரை, மன்னார்
4. ஓ.ஏல்.வஜித்: 330 சம்மாந்துறை
5. எம்.சந்திரலதா: மகா பில்லேவ தத்திரிமலை

Related Posts