- Monday
- November 24th, 2025
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்துள்ள பிரபுதேவா, கடைசியாக தமிழில் ‘எங்கள் அண்ணா’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு தமிழில் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபுதேவா, தற்போது தமிழில் நடிக்க ஆர்வம் காண்பித்துள்ளார். இவர் நடிக்க இருக்கும் புதிய...
ஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் கொச்சி மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் அசோக் செல்வனும், விக்ராந்தும் களம் இறங்கினர். இதில்...
கவுதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் சிம்பு-மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதைத் தொடர்ந்து கவுதம் மேனன் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும் - பஞ்சு அருணாச்சலமும் இப்படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தில் நாயகிகளாக கேத்ரீன் தெரசா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும்,...
தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுடன் அஜீத் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வேதாளம் படத்திற்குப் பின்னர் அஜீத் 2 மாதங்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டு லண்டன் செல்கிறார். அவர் திரும்பி வந்தவுடன் அடுத்து நடிக்கும் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் அஜித்தை...
சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'போர்க்களத்தில் ஒரு பூ' திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்த அழைப்பாணையினை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது....
அனிருத் சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே விஜய்-அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார். ஆனால், சமீபத்தில் இவர் பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியது இவருடைய மார்க்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் பல படங்களில் இருந்து அனிருத் வெளியேற்றப்பட்டார். நேற்று நடந்த விருது விழா ஒன்றில் மாரி படத்திற்காக அனிருத்திற்கு சிறந்த...
சிவகார்த்திகேயன் இன்று விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார். இவரின் வளர்ச்சி குறித்து நாங்கள் கூற தேவையில்லை, தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிவார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இவரின் ரஜினிமுருகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, தற்போது தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றில் சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘ஒவ்வொரு...
யாழ் திரைப்படத்தின் பாடல்களும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம்.இதுவரை தமிழ் சினிமாவில் பல ஈழத்து பதிவுகளை படமாக்கியுள்ளனர். ஆனால் எந்த ஒரு கமர்ஷியல் அம்சமும் இல்லாமல் மனதில் பட்டதை மிக நேர்மையாக யாழ் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ். ஆனந்த்.நந்தா படத்தில் நம்மை எல்லாம் நடிப்பால் மிரட்டிய வினோத் கிஷன் கதாநாயகனாக...
பொங்கலுக்கு வெளியான தாரை தப்பட்டை படத்தை வைத்து பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்தில் நடித்த வரலட்சுமிக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதுவும் உச்சநட்சத்திரத்திடமிருந்து. பாலாவின் படங்கள் குறித்த விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், அவற்றைப் பார்த்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கத் தவறுவதில்லை ரஜினி. நான் கடவுள் பார்த்த ரஜினி, தமிழ் சினிமாவே தலை நிமிர்ந்து...
நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா(50) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார். நேற்று படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில்...
மக்களின் நடிகராகவே தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். மிகப் பெரிய விருதுகளையோ, திரைப்பட விருதுகளையோ வாங்கியதில்லை. இந்திய அரசாங்கத்தின் பத்மபூஷன் விருது அவருக்கு 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அது தவிர சில தனியார் விருதுகளும், சில குறிப்பிட்ட திரைப்பட விருதுகளை வாங்கியிருக்கிறார். இந்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள்...
தூங்காவனம் படம் ரிலீசுக்கு முன்பே கமல் ஹாஸன் தனது கெட்டப்பை மாற்றிவிட்டார். விருமாண்டியில் வந்தது போல பெரிய முறுக்கு மீசையுடன்தான் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது அந்த கெட்டப்பை மாற்றி, ஆளவந்தானில் வந்தது போல மீசையின்றி, குறைந்த தலைமுடியுடன் காட்சி தருகிறார். இந்த கெட்டப் எதற்காக என்று அவர் வெளியில் கூறவில்லை. தூங்காவனம் வெளியாகும்...
இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் 'நையப்புடை'. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்...
இந்தியா சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று வெற்றி கொடி நாட்டியவர் முருகதாஸ்.இவர்கள் இருவரும் அதர்வாவிற்காக ஒன்று சேரவுள்ளனர், நீங்கள் நினைப்பது போல் படத்தில் இல்லை. முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கிய கணிதன் படத்தின் இசை வெளியீட்டி விழாவிற்காக தான். இதில் ரகுமான் பாடல்களை வெளியிட் முருகதாஸ்...
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியானது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு...
நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான மலையாள படம் பிரேமம். இப்படம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியானது. காதல் கதையம்சம் கொண்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மலையாள மொழியிலேயே இப்படம் தமிழ்நாட்டில் வெளியானது. இங்கேயும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களை இப்படம்...
ஏ.ஆர்.ரகுமானின் நெஞ்சே எழு இசை நிகழ்ச்சியால் தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆப் யுவன் நிகழ்ச்சி தள்ளிப் போயிருக்கிறது. சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்கின்ற இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். கடந்த 16 ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அடுத்ததாக வருகின்ற 23 ம்...
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி' தலைவர் ஜி.சிவா...
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படம் பெரிய ஹிட்டானதையடுத்து, இப்படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசிய ‘எனக்கு இன்னொரு பேர்...
Loading posts...
All posts loaded
No more posts
