Ad Widget

2000 கர்ப்பிணிகள் பங்கேற்று செய்த யோகா !! கின்னஸ் சாதனை!

ராஜ்கோட்டில் இன்று நடந்த யோகாவில் சுமார் 2000 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு சீனாவின் கின்னஸ் ரெக்கார்டை முறியடித்தனர். யோகா பயிற்சிகள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என, ஐ.நா சபை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச முதல் யோகா...

ஆஸி. எச்சரிக்கையால் 44 ஈழத் தமிழர் நிலை கேள்விக்குறி

தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அகதிகள் அந்தஸ்து கோர முயற்சித்தால் அவர்களைட் திருப்பி அனுப்புவோம் என்று ஆஸ்திரேலியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 ஈழத் அகதிகள் ஒரு வார ஜீவ மரண போராட்டத்துக்குப் பின் இந்தோனேசியாவில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். ஆச்சே மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க...
Ad Widget

திருவள்ளுவர் சிலைகளை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடு

இந்திய-இலங்கை நட்புறவை மேம்படுத்தும் வகையில், சென்னையிலிருந்து திருவள்ளுவரின் 16 சிலைகள் இலங்கைக்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய, இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் இலங்கையில் நிறுவப்பட உள்ள இந்த சிலைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் இந்த சிலைகள் விரைவில்...

ஜெயலலிதா, பிரபாகரனை கைதுசெய்ய சொன்னார்: மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர் பிரச்சனையில், போரின்போது பொதுமக்கள் உயிரிழப்பது இயல்புதான் எனக் குறிப்பிட்டவர் ஜெயலலிதான். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்' என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தமிழக சட்டசபையின் நேற்று இடம்பெற்றது. இதன்போது, அதிமுக உறுப்பினர் செம்மலை...

துரையப்பா விளையாட்டரங்கத் திறப்பு விழா நயவஞ்சக நாடகம்!

மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜகட்டத்தில் நாதுராம் கோட்சே படத்தைத் திறந்து வைப்பதுபோல் தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு ஆல்பர்ட் துரையப்பா பெயரைச் சூட்டி, வண்ணங்கள் மிளிர வரையப்பட்டு திறப்பு விழா நடத்தி இருக்கிறார்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் நடைபெற்ற அர்மீனியர்...

whatsapp மூலம் சிகிச்சை!! நோயாளி மரணம்!!

இந்தியா, தமிழ் நாடு, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் நார்த்தங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் கால் முறிவு ஏற்பட்ட ரமேஷ், திருவாரூரில் எலும்பு முறிவு சிகிச்சையளிக்கும் மருத்துவர் அன்சாரியை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு மருத்தவர்,...

இலங்கையின் முன்னேற்ற பாதையில் இந்தியா இலங்கையுடன் கைகோர்த்து நிற்கும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலாக கலை, கலாசாரம், மொழி ரீதியிலான உறவு நீடித்து வருகிறது. தற்போது துரையப்பா விளையாட்டரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளமையானது, பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று (18) சனிக்கிழமை...

ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது

தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மத்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்படும் என்று, தமிழ் நாட்டின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார்.இது தொடர்பில் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர...

‘ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!’ சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்மங்கள் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறன. அதில் லேட்டஸ்ட் வரவு, ‘ ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்’ என விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஸ்டேட்டஸ். அப்படியானால், 25 ஆண்டுகளாக சின்ன சாந்தன் என்பவர் எதற்காக சிறையில் இருக்கிறார்? என...

சோனியாவை கிண்டல் செய்ததால் வாலிபர் குத்திக்கொலை

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜதின்ராஜ் ‘விஜய் நகர் நண்பர்கள்’ என்ற பெயரில் ‘வாட்ஸ்-அப்’பில் ஒரு குரூப் உருவாக்கி இருந்தார். இதில் உள்ளவர்களுக்கு பிரசாந்த் நாயக் என்பவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாத்திரம் தேய்ப்பது போல கிண்டல் செய்து ‘வாட்ஸ்-அப்’பில் படம் அனுப்பினார். இதனால் இரு தரப்பினரும் நேற்று முன்தினம் இரவு...

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் வருகிற 27ஆம் திகதிக்குள் தமிழக அரசாங்கம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜீவ்காந்தி...

வடக்கிலுள்ள இராணுவத்தை அகற்றுங்கள்-கருணாநிதி

வடக்கிலுள்ள இராணுவத்தை விலக்க வேண்டும் என்று என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துவதாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வட மாகாண முதமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், முதல்வரின் இந்தக் கோரிக்கையை அங்கேயுள்ள இராணுவம் முற்றிலுமாக...

இன்று காலை கடல் திடீரென உள்வாங்கியது: சுனாமி அச்சத்தில் மக்கள்!!

தமிழ்நாட்டை 2004ம் ஆண்டு சுனாமி பேரலைகள் தாக்கிய பிறகு வங்கக்கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக வங்கக்கடலின் நீரோட்ட திசையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது வங்கக்கடலில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கடுமையான நீரோட்டம் காணப்படுகிறது. இந்த கடும் நீரோட்டம் காரணமாக தமிழக கடலோரப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கடல்...

இந்திய கடலில் தத்தளித்த இலங்கை தமிழ்குடும்பம் மீட்பு!

இந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களை நாகப்பட்டின மீனவர் குழுவினால் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான படகில் பயணித்த இலங்கையர்கள், மத்திய கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை...

தாய், மகளை கொன்று கொள்ளை!! 13 வருடங்களின் பின் சிக்கிய இலங்கை அகதி

தமிழகத்தில் தாய் மற்றும் மகளை கொன்று கொள்ளையடித்த வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அகதி ஒருவர் சிக்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திண்டுக்கல் ஸ்பென்சர்காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்த துரை என்பவரின் மனைவி பூங்கோதை. இவர்களின் 3 வயது குழந்தை ஜனப்பிரியா. கடந்த 2003–ம் ஆண்டு பூங்கோதையும், ஜனப்பிரியாவும் வீட்டில் இருந்தனர். அப்போது...

25 ஆண்டுகளாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்- சத்யராஜ்

மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என சென்னையில் பேரணியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். மகனின் விடுதலைக்காக 25 ஆண்டுகாலமாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை...

உலகத்தை மாற்றிய 10 பேர் பட்டியலில் சென்னை தொழில் அதிபர்

சென்னையை சேர்ந்த 30 வயதான இளம் தொழில் அதிபர் உமேஷ் சச்தேவ் என்பவரை அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை கவுரவித்துள்ளது. ‘தங்கள் படைப்புகள் மூலம் உலகத்தை மாற்றி வருபவர்கள்’ என்ற 10 பேர் அடங்கிய பட்டியலை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், உமேஷ் சச்தேவ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் தன்னுடைய கல்லூரி நண்பர் ரவி சரோகியுடன் சேர்ந்து...

சென்னையில் 50 வீடுகளை கடல் காவுகொண்டுள்ளது!

சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்ததோடு நீரின் மட்டமும் உயர்ந்து வந்தது. இதனையடுத்து கடற்கரையில் அமைந்துள்ள 50 வீடுகளை கடல் அடித்துச் சென்றுள்ளது. மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள ஸ்ரீநிவாஸபுரம் என்ற இடத்திலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கடலின் நீர்மட்டம்...

ஈழ அகதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது

தமிழகம் – திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் உள்ள நான்கு ஈழ அகதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்கின்றது. தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்குமாறு கோரி, குறித்த அகதிகள் நேற்று புதன்கிழமை முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களில் அவுஸ்திரேலியா செல்ல...

திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் ஈழ அகதிகள் நால்வர் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழகம் - திருச்சியிலுள்ள சிறப்பு தடுப்பு முகாமில் ஈழ அகதிகள் நால்வர் இன்று புதன்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வழக்கிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கிலும்...
Loading posts...

All posts loaded

No more posts