- Tuesday
- June 10th, 2025

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு...

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே...

கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் பாடசாலைக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட சிறார்களை மீள கற்றலில் இணைக்கும் செயற்பாடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி – கல்மடு நகர், நாவல் நகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதியில் பாடசாலைகளுக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும்...

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்னப்பல்லவராயன்கட்டு கிராமத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பை, ராணுவத்தினர் தீயிட்டு அழிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்கு வசித்த மக்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்ததால், கடந்த ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு 100 ஏக்கர் தென்னையும் குடமுருட்டிக் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் வசித்த மக்களுக்கு 25 ஏக்கர் தென்னையும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும், தென்னைகள் உரிய பராமரிப்பின்றி...

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் வடக்கின் பல பகுதிகளின் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதும் இலங்கை ராணுவம், தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பச்சை புல்மோட்டை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேசங்களில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றில் அகழ்வுப் பணிக்கான அனுமதியும் பெறப்பட்டு நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதலில் பச்சை...

நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இது ஓர் தனி ஈழமான பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய...

அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி சுகாதார வைத்திய பணிமனைக்கான விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் அமைச்சர், பிரதி அமைச்சர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள்...

இலங்கை குடியுரிமை பறிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவித்த அரசாங்கம், வருடக்கணக்கில் எவ்வித வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் விடயத்தில் பாராமுகமாக செயற்படுவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் பொன்னுத்துரை சிவசுப்மணியம் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து வருகை தந்துள்ள அவர், கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை)...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பரந்தன் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையம் ஒன்றில் மது அருந்திய நபர்களிற்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அது குழு மோதலாக மாறியுள்ளது. குறித்த மோதல் பின்னர் வலுவடைந்து...

முல்லைத்தீவு, மணலாறு ஜனகபுரம் பகுதியில் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலிஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதுடன், போதைப்பொருள் விற்பனை செய்த நபரையும் கைதுசெய்துள்ளனர்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் கிழக்கு...

மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் ‘சமதளத்தில் ஒன்றாக’ எனும் தொனிப் பொருளில் இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியில் மாற்றுதிறனாளிகளால் வடிவமைக்கப்பட்ட கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,...

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 1999.09.15 அன்று இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் பகுதியில், நேற்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உட்ப்பட 24 பொதுமக்கள் பலியாகியிருந்தனர். வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் ஏற்பாடு...

மாங்குளம் செல்வபுரம் முறிகண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சிலருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வசிக்கும் வீட்டிற்கு முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த சிலர் மது போதையில் அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் மாங்குளம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் அதற்கு...

தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். மேற்படி நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு...

சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி நகரின் மத்தியில்...

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்படும் இராணுவ வீரரை, விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்ட, ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்....

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள், மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். வைத்தியசாலை...

யுத்த பாதிப்புக்களில் இருந்து மீண்டு வரும் கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறையில் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் உட்பட 113 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆளணி விபரங்கள் தொடர்பில் மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. அதாவது 19 வைத்திய நிபுணர்கள் தேவையான நிலையில்...

All posts loaded
No more posts