இன்று பலர் முன்னாள் போராளிகளை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் : தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள்

தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள் அமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சி பாரதி ஸ்டார் விடுதியில் மாலை 2 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ”இன்று பலர் முன்னாள்...

முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றைய மாணவனின் சடலமும் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றுமொரு மாணவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரைப் பிரதேசத்தில் நீராடியபோது காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நேற்று (புதன்கிழமை) நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில்...
Ad Widget

முல்லைத்தீவு கடலில் காணமல்போன மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்டு காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான நேற்று பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒரு...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஏக்கத்துடன் தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற நிலையில் தீர்வு கிடைக்கும் வரை போரட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவிக்கின்றனர். யுத்த காலத்தில் வலிந்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்கள் இதுவரை தமக்கான தீர்வு கிடைக்கவில்லை...

வடக்கு மக்கள் நல்லொழுக்கம் மிக்கவர்கள்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாழும் பொதுமக்களில் 99 வீதமானோர் நல்லொழுக்கம் மிக்கவர்கள் என்றும், ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு ஏனையோரை மதிப்பிடமுடியாதென்றும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக வடக்கில் செயற்படும் வாள்வெட்டுக் குழுக்களுக்கு பின்னணிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு...

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்றுடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியாருக்கு சொந்தமான குறித்த பேரூந்து ஏற்கனவே விபத்தில் சிக்கிய நிலையில்...

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!

இலங்கையின் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சண்டையிடுதல், பாடசாலைகள் ஆலயங்களுக்கு இடையூறு விளைவித்தல்,...

மகாதேவா சிறுவர் இல்ல அதிகாரி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சிறுவர் இல்ல அதிகாரி ஒருவர் நிதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி நேற்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். கிளிநொச்சி – மகாதேவா...

சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை இடம்பெறவில்லை : இல்லத் தலைவர்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார். மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு!

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு...

கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில்!!!

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே...

பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் பாடசாலைக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட சிறார்களை மீள கற்றலில் இணைக்கும் செயற்பாடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி – கல்மடு நகர், நாவல் நகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதியில் பாடசாலைகளுக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும்...

புலிகள் உருவாக்கிய வளத்தை அழிக்கும் இலங்கை ராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்னப்பல்லவராயன்கட்டு கிராமத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பை, ராணுவத்தினர் தீயிட்டு அழிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்கு வசித்த மக்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்ததால், கடந்த ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு 100 ஏக்கர் தென்னையும் குடமுருட்டிக் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் வசித்த மக்களுக்கு 25 ஏக்கர் தென்னையும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும், தென்னைகள் உரிய பராமரிப்பின்றி...

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தீவிரமாக தேடிவரும் ராணுவம்!

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் வடக்கின் பல பகுதிகளின் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதும் இலங்கை ராணுவம், தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பச்சை புல்மோட்டை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேசங்களில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றில் அகழ்வுப் பணிக்கான அனுமதியும் பெறப்பட்டு நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதலில் பச்சை...

பிரபாகரன் ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன்! : கிளிநொச்சியில் பாரதிராஜா

நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இது ஓர் தனி ஈழமான பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய...

சுகாதார அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்!

அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி சுகாதார வைத்திய பணிமனைக்கான விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் அமைச்சர், பிரதி அமைச்சர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள்...

சரத் பொன்சேகா விடயத்தில் காட்டிய அக்கறை, தமிழர்கள் விடயத்தில் எங்கே சென்றது?

இலங்கை குடியுரிமை பறிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவித்த அரசாங்கம், வருடக்கணக்கில் எவ்வித வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் விடயத்தில் பாராமுகமாக செயற்படுவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் பொன்னுத்துரை சிவசுப்மணியம் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து வருகை தந்துள்ள அவர், கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை)...

வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பரந்தன் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையம் ஒன்றில் மது அருந்திய நபர்களிற்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அது குழு மோதலாக மாறியுள்ளது. குறித்த மோதல் பின்னர் வலுவடைந்து...

முல்லைத்தீவில் பொலிஸார் மீது கல்வீச்சு!

முல்லைத்தீவு, மணலாறு ஜனகபுரம் பகுதியில் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலிஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதுடன், போதைப்பொருள் விற்பனை செய்த நபரையும் கைதுசெய்துள்ளனர்....

சம்பந்தன் தொடந்தும் இரட்டைவேடம் போடமுடியாது! : சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் கிழக்கு...
Loading posts...

All posts loaded

No more posts