- Friday
- May 15th, 2026
இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம் திகதியும் மீண்டும் நடைபெறவுள்ளது. கொழும்பில் 51 பரீட்சை மத்திய நிலையங்களிலும், யாழ்ப்பாணத்தில் 6 பரீட்சை மத்திய நிலையங்களிலும் இந்த பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...
பொலிஸ் விசேட அதிரடி படையணியில் பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் இம்மாதம் 10 ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானியில் இது தொடர்பான மேலதிக விபரங்களை பார்வையிட முடியும்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் உரிய வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அறிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை குறைப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைப்பதோடு வினைத்திறனான சேவையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இதன்மூலம கிடைக்கும்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர், இன்று (சனிக்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒரு மீது தாக்குதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி சிவன் கோயில் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கா.சற்குணதேவன் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலில் படுகாயமடைந்த சற்குணதேவன் சிகிச்சைக்காக சாவகச்சேரி...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டநிலையில் எதிர்வரும்...
உலகளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் பொருட்களை தடை செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சியிலும் இதற்கான முதற் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக பிளாஸ்ரிக் கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் பொருட்களின் பாவணையை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த செயற்திட்டத்தை கிளிநொச்சி...
விபத்துக்குகாரணமான லொறி சாரதியை விடுவிக்க பொலிஸார் முயற்சி!! பொதுமக்கள் பொலிஸார் இடையே அமைதியின்மை!!
கிளிநொச்சி- செல்லையாதீவு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை பூநகரி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 32 வயதான ஒருவர், செல்லையாதீவு சந்தி பகுதியில் விபத்துக்குள்ளாகி...
முல்லைத்தீவில் தீவிரமாக பரவி வரும் இன்புளுவன்சா பி வைரஸ்தொற்று தொடர்பில் ஆராய, வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய மருத்துவமனைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வைரஸ்தொற்று தொடர்பிலான நிலைமைகளை மருந்துவர்களிடம் கேட்டறிந்துக் கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையின் பொது...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 25, 26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்கமுடியும் என யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி...
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் 116 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் வழக்கொன்றில் யாழ் நீதவான் நீதிமன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை நேற்று (04.01.2017) வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது சுதர்சிங் விஜயகாந்தை குற்றவாளி என...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்....
பிரபாகரன் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்தமை யால் மரணத்தை தழுவியிருக்கலாம். ஆனால், மண்டியிட்டு மலர் மாலை பெறவேண்டிய அவசியம் அவருக்கு என்றும் இருந்ததில்லையென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித் துள்ளார். புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துக்களைப் பெற வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர்...
"புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை உண்மைதான். ஆனால் அவை எவ்வாறு அவரது வீட்டுக்குள் வந்தன என சந்தேகநபருக்கு அறவே தெரியாது. அது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை நீதிமன்று பெறவேண்டும்" இவ்வாறு சந்தேகநபர் சார்பில் முன்னணிலையான ஜனாதிபதி சட்டத்தரணி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார். புளொட்டின் முன்னாள் உறுப்பினர்...
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியவின் தற்போதைய நிலையையே படத்தில் காண்கிறீர்கள். 48 வயதான ஜெயசூரிய அண்மைக்காலமாகவே முழங்கால் உபாதையால் அவதிப்பட்டு வருகின்றார். அத்தோடு பிடிமானம் எதுவுமின்றி நடக்கக் கூட முடியாமல் தவித்து வருகின்றார். இதனால் முழங்காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்த ஜனவரி மாத முதல் வாரத்திலேயே மெர்பேர்னில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லவுள்ளார்....
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2014 ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளின் பின் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கான தண்டனைத் தீர்ப்பு வரும் 9ம் திகதி வழங்கப்படும் எனவும் அன்றுவரை குற்றவாளியை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டார்....
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதுடன் ஒதுக்கப்பட்ட பகுதி போக்குவரத்துச் சபையினரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஒற்றிணைந்த...
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இராணுவத்தின் வசமுள்ள நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியிடம் நீதிபதி இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை...
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவினர், இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து, வடக்கின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறியவுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள்...
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற செயற்பாடு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற...
Loading posts...
All posts loaded
No more posts
