- Wednesday
- May 13th, 2026
ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவரின் புகைப்பட கருவியை சேதமாக்கி ஊடகவியலாளரை அச்சுறுத்திய இருவரை பிணையில் செல்ல யாழ்.நீதிவான் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். யாழ்.கொக்குவில் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்ண நிறபூச்சு (பெயின்ட்) விற்பனை நிலையம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டது. குறித்த தாக்குதல் சம்பவம்...
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்குமிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ் மத்தியகல்லூரி வெற்றிபெற்று சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு கல்லூரிகளுக்கும் இடையிலால் இடம்பெறும் 112 ஆவது கிரிக்கெட்...
தனது தந்தை கொல்லப்பட்ட பின்னர், பாதுகாப்புச் சூழலே மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புதல்வருமான ராகுல் காந்தி, 2009ஆம் ஆண்டில் பிரபாகரன் இறந்ததைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அதன்போது தனக்கு இரண்டு விதமான உணர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அவரை ஏன் இப்படி அவமானப் படுத்துகிறார்களென்றும் அவரது...
உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டவர்களே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (11) காலை தவக்கால வழிபாடு நடைபெற்று வந்த வேளையில் அந்தோனியார் ஆலய நிர்வாகத்தினால் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவினை உட்கொண்டவர்கள் மயக்கடைந்து விழந்துள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் பிரதேச வங்கியொன்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றுக்கு கொண்டுச்செல்லப்பட்ட 11,074,000 ரூபாய் பணத்தில் 8,020,000...
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்களை மீள செயற்படுத்துவது குறித்து இன்று (திங்கட்கிழமை) விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில், அரச அதிகாரிகள், இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு அதிகாரிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பேஸ்புக்,...
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அதற்கான உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களினதும் பெண் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கிடைக்கத் தாமதமாகிது. இந்நிலையில் தற்போது 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
கண்டியில், திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், “கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படும்” என நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் குறித்த கண்டி பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு ,அதன் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால், கடந்த...
யாழ் பல்கலைக்கழக ஊழியர்சங்க இணைச்செயலாளர் த.சிவரூபன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம்.. 09.03.2018 UEU/2017-2018/022 பத்திரிகைக் குறிப்பு (09.03.2018) இன்று கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1. 12.03.2018 திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதென்றும் 2. நாடு முழுவதிலுமுள்ள...
யாழ். முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில்,முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.அங்கு அகழப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக்...
கண்டி மாவட்டத்தில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் முப்படையினரும் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் கடந்த ஒரு வாரகாலமாக நீடித்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. முஸ்லிம்களின் வணிக நிலையங்கள், வீடுகள், உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன சிங்கள இனவாதக் கும்பல்களால்...
சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "டியாங்கோங் – 1" பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 தொன் எடைகொண்ட குறித்த விண்வெளி ஆராய்ச்சி...
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கில் கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெரும்பாலான தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளன. மன்னாரில்...
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் யாழ். இந்துக் கல்லூரிக்கும் இடையிலான ‘இந்துக்களிள் சமர்’ யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதுவரை நடந்துமுடிந்துள்ள 8 போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மூன்று தடவைகள் வெற்றிபெற்றுள்ளதுடன், யாழ். இந்துக் கல்லூரியினால் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது . நான்கு போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன. இந்த போட்டியில் நாணய...
சமூக வலைத்தளங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கு முறைகளை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டில் நிலவிய இனங்களுக்கிடையிலான மோதலை பாரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்ததாக குறித்த சந்திப்பில் கருத்து...
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி , இணையத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் , வைபர் , இமோ மற்றும் வட்ஸ்எப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும்...
சமூக ஊடக வலையமைப்பு குறித்த தடைகளை ஜனாதிபதியும், பிரதமரும், டிஜிட்டல் கட்டுமான அமைச்சரும் மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்த சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாற்றுவழிகளை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் மற்றைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இவருக்கு, 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டார். அத்துடன், மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிவான் தீர்ப்பளித்தார். யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தைப் பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்...
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும். இதுவரை நடந்து முடிந்த 111 ஆட்டங்களில் 40...
Loading posts...
All posts loaded
No more posts
