- Wednesday
- May 6th, 2026
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக்னேஸ்வரன்...
யாழில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணியானது கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் யாழில் நடத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரை நிகழ்வை நல்லூரில்...
மக்களுக்காக மக்கள் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி வேட்பாளராக தானே களமிறங்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே நாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் எனவும் அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மக்களோடு மக்களாகவே வாழ்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை நகரில்நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர்...
எழுக தமிழ் 2019, பரப்புரை பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் நல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது எழுக தமிழ் எழுச்சிப் பேரணி அடுத்தமாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த எழுச்சிப் பேரணிக்கு தாயக மக்களை அணிதிரட்டும் பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய...
பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ். சிவரூபனுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர். பளைப் பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. பளை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடை பவனியாக பளைப் பிரதேச செயலகம் வரை சென்றதுடன்...
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி ஏமாற்று வேலையென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சி.வி மேலும் கூறியுள்ளதாவது, “ஓ.எம்.பி அலுவலகத்தால் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவிதமான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 30ஆம் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணம், கோப்பாய் உள்ளிட்ட காவற்துறைப் பிரிவுகளில் காவற்துறை பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி கொலைச் சதி மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் சம்பவங்களை அடுத்து அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை...
நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. உரிய வகையில் வைத்தியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படாமை உள்ளிட்ட 8 காரணிகளை முன்வைத்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின்...
தமிழர்கள் விடயத்தில் அவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதாக அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். காரைதீவில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த 9ம் திகதி இனந்தெரியாத...
தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில...
மானிப்பாயில் முன்னாள் போராளி ஒருவரின் வீடு உள்பட இரண்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயிலுள்ள சந்தேகநபரின் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற காவல்துறையினர், அவரைக் கைது செய்து மானிப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பண்டத்தரிப்பிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் அண்மையில் வாள்களுடன் புகுந்து...
கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டு வளவில் முதலாவதாக படையினர் தேடுதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார். அதன் பின்னர் தவறுதலாக தேடுதல் நடத்திவிட்டோம் என அடுத்த வளவிற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து இவ்வாறு தேடுதல் நடவடிக்கை...
போர்க்குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே பிரதானக் காரணமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம், அவர் சுகநலத்துடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. நல்லூர் ஆலய வீதியில் மின்சாரம் தாக்கியதாக அம்புலன்ஸ் வண்டியில் அழைத்துவரப்பட்ட செல்லத்துரை ஜெகநாதன் (வயது – 64) என்ற முதியவர் இன்று காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு உரிய...
நவாலி வடக்கிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் அங்கிருந்த இளைஞனை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் வீட்டின் உபகரணங்களை பெற்றோல் ஊற்றிக் கொழுத்திவிட்டுத் தப்பித்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் நவாலி வடக்கில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த சத்தியசீலன் சயந்தன் (வயது 20) என்ற இளைஞன் யாழ்ப்பாணம்...
கடையில் இருந்து புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சில மணி நேரத்திலேயே மர்மக் கும்பலினால் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பணத்தில் உள்ள ஓர் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் 2 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பெறுமதியான...
கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை 2 இளைஞர்கள் பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க பிரஜை கோண்டாவில் பகுதியில் பயணித்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் அவரிடம்...
நல்லூர் ஆலய வளாகத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இராணுவம் அங்கு தொடர்ந்தும் இருப்பதால், பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு...
Loading posts...
All posts loaded
No more posts
