Ad Widget

சுகபோகங்கள் இல்லாது மக்களுக்காக சேவையாற்ற நானே களமிறங்குவேன் – சஜித்

மக்களுக்காக மக்கள் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி வேட்பாளராக தானே களமிறங்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் எனவும் அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மக்களோடு மக்களாகவே வாழ்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை நகரில்நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச சுகபோகங்களை அனுபவிப்பதற்காக ஆட்சியினை கைப்பற்ற முனையவில்லை. அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிடினும் மக்களோடு மக்களாகவே வாழ்வேன்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நானே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவேன். நாட்டு மக்கள் அதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம். பலமான ஒரு தலைமைத்துவத்தினையும் அதனை மையப்படுத்தி சிறந்த அரசியல் நிர்வாகத்தையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ரணசிங்க மக்களுடன் மக்களாகவே வாழ்ந்து மக்களுக்காக உயிர் தியாகம் செய்தார். இந்நிலையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

Related Posts