இலங்கையில் கோரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. மருதானையைச் சேர்ந்த 72 வயதான இஸ்லாமியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு...

யாழ். மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே இந்த...
Ad Widget

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கோரோனா; அவர் பயணித்த விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்

மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை தந்த அனைவரையும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இராணுவத் தளபதியும் கோரனா பரவலைக் கட்டுப்பாட்டுத்தும் செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை...

கடற்படையின் ஒத்துழைப்புடன், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!!

யாழ்ப்பாணம், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கொண்டு செல்ல இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது. கொரோனா வைரசு தொற்றைக்கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேவேளைத்திட்டங்களின் கீழ் அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதற்கமைய, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நயினாதீவு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்றும் இடம்பெற்றுவருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த...

ஏப்ரல் 2,3 மற்றும் 6ஆம் திகதிகளில் மருந்தகங்களைத் திறக்க அனுமதி

அவசர தேவைக்குரிய மருந்துகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக நாளை ஏப்ரல் 2ஆம் திகதி மறுநாள் 3ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு அனுமதியளித்திருப்பதாக பொலிஸ் மா அதிபருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடிதம் மூலம்...

நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா: வைத்திய நிபுணரின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் எனவும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடனக் (நோயெதிர்ப்பு) குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்றும் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் குறிப்பிடுகையில், “இன்று நாட்டிற்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ள கொரோனா எனப்படும் கொவிட்-19 வைரஸ் பற்றிய பல செய்திகள்...

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை பகுதிகளைச் சேர்ந்தவர்களே புதிதாக நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால்...

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளி நோயாளர்களுக்கு மருத்துவ சேவை

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் (க்கிளினிக் ) மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று (31) ஆரம்பமானது இதன் போது முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார். இதன் மூலம் தற்போதைய கொரோனா நோய்...

ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி

ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்துகொடுக்கவுள்ளது. இந்தத் தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு 2ஆம், 3ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையை...

ஊரடங்கு சட்டம் பற்றிய ஜனாதிபதி செயலகத்தின் அறிவித்தல்!!

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு...

எண்மர் படுகொலையாளியை பொதுமன்னிப்பில் விடுவித்தமைக்கு யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றியம் கண்டனம்

மிருசுவிலில் பாலகன் உள்பட 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றவாளியான இராணுவச் சிப்பாயை அவரது தூக்குத் தண்டனையை இரத்துச் செய்து பொது மன்னிப்பில் விடுதலை செய்த ஜனாதிபதியின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...

வடக்கு மக்களை பாதுகாக்க 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் உயிரையும் பணயம் வைத்து சேவையில்!! – பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு கோரிக்கை

“கோவிட் – 19 நோய்த்தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வடமாகாணத்தில் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தமது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவர் சார்பாகவும் உங்களிடம் ஓர் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றோம். தயவு செய்து உங்கள் வீடுகளில் இருந்து இந்த நோய் பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு...

கோரோனா பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் – வீடியோக்களைப் பார்வையிடுவது ஆபத்து!!

அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்த நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும்...

நேற்று மட்டும் 20 கோரோனா நோயாளர்கள்அடையாளம் – நோயாளிகள் எண்ணிக்கை 142ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் 10 பேர் நேற்று (மார்ச் 31) செவ்வாய்க்கிழமை இரவு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அத்துடன், நேற்று (மார்ச் 31) செவ்வாய்க்கிழமை...

அரச வைத்தியசாலையில் காலதாமதமின்றி அனுமதித்திருந்தால் நீர்கொழும்பு வாசியைக் காப்பாற்றியிருக்க முடியும் – சுகாதார அமைச்சர்

கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பத்தலைவரை நேரடியாக காலதாமதமின்றி அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். “அவருக்கு சுவாசக் கோளாறு எனத் தெரிவித்து தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாளாநேற்று முன்தினமே நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத்...

சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி – முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

சமுர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு அதன் முதற் கட்ட கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த அமைச்சரவையின் போது கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக அமைச்சரவை...

குடாநாட்டில் கொரோனா தாக்கம் பாரதூரமாக அமையலாம் – எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

கொரோனா வைரசின் தாக்கம் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யாரும் சமூக இடைவெளியை பேணுவதாக இல்லை. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் பெப்ரவரி 27 இல் 60 நோயாளிகள். 3 வாரங்களுக்கு முன்னர், மார்ச் 3 இல் எம்மைப் போல் அவர்களும் 100 நோயாளிகள் தானே என்று...

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது கொரோனாவினை குணப்படுத்தும் மருந்து!

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இதன்படி, முதற்கட்டமாக 5 ஆயிரம் மருந்துகள்...

பிறப்பு – இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.. இந்த விடயங்கள் தொடர்பாக பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: பதிவாளர் நாயகம் திணைக்களம் எனது இலக்கம் :...

கண், மூக்கு, தொண்டை – சமகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள்

கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் சமகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் பலவற்றை வழங்கியுள்ளனர். கொரோனா-வைரஸ் பரவியுள்ள காலகட்டத்தில் பொதுமக்களையும், குறிப்பாக பிள்ளைகளையும், முறையாக பாதுகாப்பது இதன் நோக்கமாகும். மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் கொவிட்-நைன்ரீன் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காரணமாக, மருத்துவமனைகளில் ENT சிகிச்சை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனவே, கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts