- Saturday
- May 2nd, 2026
வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக இராணும் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு இவ்வாறு அரச உயர்மட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட...
இலங்கையில், மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை(29.06.2020 காலை - 8.15) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,037 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது....
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பி.கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பி.கோணேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,...
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது. மே மாதம் வரையில் முழு ஊரடங்கும் பின்னர் தளர்வுகளுடன் கட்டங்கட்டமாக ஊரடங்கு அமுலாக்கப்பட்டு வந்த...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய 50 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தொழிற்பயிற்சி நிலையங்களை முதலில் திறப்பதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கு...
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அலட்சியம் செய்கின்றனர்....
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் பயனாளரிடம் கையளிக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி தெற்கு வசாவிளான் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடே நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. ஏழு வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணி ஒருவருக்கே குறித்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம்...
எதிர்வரும் பொதுத் தேர்தலானது நிரூபிக்கப்பட்ட திறமைக்கு முன்னுரிமை வழங்கவும், நல்லாட்சியின் பொய் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் அனைத்து வாக்களர்களுக்கும் கிடைக்கும் அரியதொரு சந்தர்ப்பமாகும் என நம்புகிறேன். கோவிட் - 19 தொற்றினைக் கட்டுப்படுத்தியமை மூலம் எமது நாடு பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கு சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடிப்பதுடன், சூழலைப் பாதுகாத்து, முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரமொன்றில் ஈடுபடுமாறு அனைத்து...
நாடுமுழுவதுமுள்ள திரையரங்குகளை ஜூன் 27ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 20ஆம் திகதி கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து திரையரங்குகள் அனைத்தும் 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி திரையரங்குகளை வரும் ஜூன் 27ஆம் திகதி மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கலாசார...
கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் இறுதிப்போட்டியில் ஊழல் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை விசாரணைக்காக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தன்னிடமுள்ள ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்பிக்கவேண்டும் என்பதுடன் உரிய விசாரணைகளுக்கு வேண்டுகோள்...
யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வாகன விபத்தில் உயிரிழந்த தீயணைப்புப் படை வீரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக் கூட்ட நிகழ்வு நேற்று மாநகர தீயணைப்புப் படைப் பிரிவில் அலுவலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் முதன்மை உரையினை யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன்...
வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து நல்லூரில் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 10 இளைஞர்களை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அருகாமையில் வைத்து 10 இளைஞர்கள் யாழ்ப்பாணம்...
மோட்டார் வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு சலுகை காலம் வழஙக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸாரினால் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் விதிக்கப்பட்ட தண்டப் பணம் விதிக்கப்பட்டிருந்த...
தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டிபய...
பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் என அக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....
ஆவா குழுவின் முக்கியஸ்தர் என காவல்துறையினரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளவரும் , தற்போது பிரான்சில் வசித்து வரும் சன்னா என்பவரின் பிறந்தநாளை கிளிநொச்சி பகுதியில் இளைஞர்கள் சிலர் கொண்டாடியுள்ள நிலையில் அவர்களில் 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி அக்காராயன் குளத்தை அண்டிய காட்டு பகுதி ஒன்றில் கடந்த 12ஆம் திகதி கூடிய சில இளைஞர்கள் “சன்னா”...
தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (17.06.2020) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கொடிகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலை...
வாடிக்கையாளர்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தும்போது இறுதி மாத மின் கட்டணப் பட்டியல் சரியானது என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பாவனையாளர்கள் நுகரும் மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இறுதிமாத மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, கடந்த...
யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகக் கூறி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு, நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றநிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகத் தெரிவித்து அப்பிரதேசத்தை, கடற்படையினர் சுற்றிவளைத்து...
இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மற்றும் தங்கல்லே ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளது. கடற்படைத் தளபதி பியால் டி சில்வா, இலங்கையில் காலியில் உள்ள முதல் நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை ஏப்ரல் 5 ஆம் திகதி திறந்துவைத்தார். கடற்படை உருவாக்கிய பல வடிவமைப்புகள்...
Loading posts...
All posts loaded
No more posts
