Ad Widget

வடமராட்சி மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அவசர அறிவித்தல்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50பேர் வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

எனவே அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பிரதேசத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனைக்கோ தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளானோர் பிரதேசத்தில் காணப்படலாம் என்ற அடிப்படையில் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் அவசர தேவைகள் தவிர்ந்த தேவையற்ற விதத்தில் நடமாடுவதையும் ஒன்றுகூடுவதையும் தவிர்க்குமாறு சுகாதார மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள புங்குடுதீவுப் பெண், கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில், புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் அதிகாலை 4.30 மணியளவில் இறக்கிவிடப்பட்டுள்ளர்.

அந்தப் பேருந்து அதிகாலை 5 மணிக்கு பருத்தித்துறையை வந்தடைந்துள்ளது. அதில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர்.

எனவே கொழும்பு- பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் மற்றும் சாரதி, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே அந்த பேருந்தில் பயணித்தோர், தன்னார்வமாக உங்களை வெளிப்படுத்தி, வட.மாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Posts