தமிழர்களின் கோரிக்கையை அரசாங்கம் புறந்தள்ளிவிட்டு சீனாவுக்கு நாட்டையே கொடுக்கின்றது!!

தமிழர்கள் கேட்பது அனைத்தும் இந்த அரசாங்கத்தினால் மறுக்கப்படுகின்றது,ஆனால் சீனா கேட்கும் சகலதும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. இந்த நாடு எமக்கும் உரியது. அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்ட எம்.பி.யுமான உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச்...

புதிய மாணவர்களுக்கான பல்கலைகழ அனுமதி விண்ணப்பம் – முக்கிய அறிவிப்பு

2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல் ஜூன் 11 வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Ad Widget

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார். இங்கு...

நாட்டு மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

நாட்டில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் நேற்று (புதன்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேருக்கும் கிளிநொச்சியில் 23...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! – மேலும் 36 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 36 மரணங்கள் பாதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 19 ஆண்களும் 17 பெண்களுமே இவ்வாறு மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் எம்பிலிபிட்டி, நாவலப்பிட்டி, புசல்லாவ, வென்னொருவ, பன்னல, இரத்மலானை, இராஜகிரிய, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊராபொல, கட்டுவ, செவனகல,...

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருக்க வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜி

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று உயிர்நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான நேற்று பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றபோது அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்கள் ஏற்றி இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள் பங்கேற்புடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும்...

யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளைத் தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு காண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தடைகள் கண்காணிப்புக்களை மீறி பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் சுடரேற்றி...

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 937 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேருக்கும் கிளிநொச்சியில் 31...

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் – சிவாஜிலிங்கம் கைதாகி பின்னர் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியபோதே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் பொலிஸாருடனான கடும் வாக்குவாதத்தின் பின்னர் எச்சரிக்கையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர், கோப்பாய் பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு, இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக...

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நினைவுகூரப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் குறித்த பதிவில், “முள்ளிவாய்க்கால் 12ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்று...

யாழ்.பல்கலையில் மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றிவிட்ட காவலாளி!!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்கலைக்கழக காவலாளி மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றியுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த...

பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக ஒருவர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பு கல்குடா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் எந்த உறுப்பினர்களையும் நினைவுகூருவதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில் பிரபாகரனின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக 38 வயது ஒருவரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும்...

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதேவேளை யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று பிற்பகலில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும்...

தடைகளை மீறி முள்ளிவாய்க்கால் பகுதியில் வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல்...

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு நந்திக் கடலோரத்தில் குறித்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

நீதி கிடைக்கும் வரை ஓயாது போராடுவோம்- நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து உரை நிகழ்த்திய முதல்வர், “உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும்...
Loading posts...

All posts loaded

No more posts