Ad Widget

“ஒருவேளை நாடு சில நாட்களுக்கு மூடப்படும்” – ஆளும் கட்சி எம்.பி.

கோவிட் -19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் சில நாள்களுக்கு நாடு மூடப்பட வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்தார்.

நாட்டில் கடினமான பொருளாதார நிலமை இருந்தபோதிலும், மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க கடினமாக இருந்தாலும் கூட அத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையாக, நாடு முழுவதும் மின்தகனம் செய்யும் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரச தாதியல்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தினசரி கிட்டத்தட்ட 100 கோவிட்-19 இறப்புகள் பதிவாகி வருவதால், அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் சவக்கிடங்குகளின் திறனும் தாண்டியுள்ளது என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts