Ad Widget

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த சடலம் சுகாதார முறைப்படி மின்தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts