இழுவைப்படகு பயன்பாட்டினை நிறுத்துமாறு அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மீனவ சமூகம் ஏதிர்ப்பு!

இழுவைப்படகு பயன்பாட்டினை (ரோடலர்) நிறுத்திவிட்டு மாற்றுத் தொழில் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை மீனவ சமூகம் ஏற்க மறுத்துவிட்டது. (more…)

த.தே.கூட்டமைப்பினால் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும், மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தனியார், பொது நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் அரச படைகள் வெளியேற்றப்படவேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் (more…)
Ad Widget

காலாவதியான பொருட்களின் விற்பனை நாளாந்தம் அதிகரிப்பு

யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் இன்று தெரிவித்தார். (more…)

கொள்கை ரீதியில் இணக்கம் ஏற்பட்டால் த.தே.கூ.வுடன் இணைவோம்: த.தே.ம.மு

'கொள்கை ரீதியில் ஒற்றுமை ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது பற்றி பரிசீலிக்கப்படும்' என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். (more…)

யுத்ததினால் கைவிடப்பட்ட படகுகளை மாவட்ட கடற் தொழிலாளர் சங்கத்திடம் வழங்குமாறு கோரிக்கை

பருத்தித்துறை மற்றும் சுண்டிக்குளம் கடற்படை முகாம்களில் காணப்படுகின்ற படகுகளை யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சங்கத்திடம் கையளிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. (more…)

“சமாதான உதயம்” சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

"சமாதான உதயம்" சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்.நகரசபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. (more…)

யாழ் இந்து – கொழும்பு ஆனந்தா கல்லூரிகளின் துடுப்பாட்டப் போட்டியில் ஆளுநர்

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற யாழ் இந்துக் கல்லூரி கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான வீ.ரி.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியினை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி கடந்த சனிக்கிழமை பார்வையிட்டார். (more…)

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வு ஒன்று யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. (more…)

வட மாகாணத்திற்கான தேசிய பல்வகைமை மாநாடு

வட மாகாணத்திற்கான தேசிய பல்வகைமை மாநாடொன்று சேவாலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை கோண்டாவிலில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு காணிகள் பெறப்படும்- ஹத்துருசிங்க

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக பலாலி விமானத்தள சுற்றியுள்ள 2 ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்கு உரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் (more…)

முதல் 60 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றமில்லை

முதல் 60 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் 180 வரை நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

மின்சார நிலைய வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் திருட்டு

யாழ். நகர பகுதியில் உள்ள மின்சார நிலைய வீதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருட்டு முயற்சி இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஆனைக்கோட்டையிலும் பொதுமக்களின் காணி இராணுவத் தேவைகளுக்கென சுவீகரிப்பு

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 1ஏக்கர் 31பேர்ச் அளவுள்ள நிலம் இராணுவத் தேவைக்கென சுவீகரிக்கப்படவுள்ளதாக மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலகம் அறிவுறுத்தல் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது. (more…)

அரசியல் செத்து விட்டதென்ற அதிருப்தி நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்: செந்தில்வேல்

அரசியல் எல்லாம் செத்துப் போய்விட்டது. இந்த அரசியல் எங்களுக்கு வேண்டாம். எங்களை ஏதோ சாப்பிட விட்டால் போதுமென்று மக்கள் நினைக்கும் ஒரு அதிதிருப்தி நிலைக்கு இந்த நாட்டு தமிழ் மக்களை கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள் (more…)

“கஜேந்திரகுமார் எங்கே?”- மூகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் நேற்று மலை 4 மணியளவில் நுழைந்த முகமூடியணிந்த மர்ம நபர்கள் நால்வர் கஜேந்திரகுமார் எங்கே எனக் கேட்டு அவரது உதவியாளரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

வடக்கில் தொழில் நீதிமன்றம் அமைப்பதற்கான சாதகமான பதில் கிடைக்கவில்லை: வட.மா.பிரதி தொழில் ஆணையாளர்

வடமாகாணத்தில் தொழில் பிணக்குகள் அதிகமாக இருப்பதனால் வடமாகாணத்திற்கு என தொழில் நீதிமன்றம் அமைப்பதற்கு நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

கிளி. மே தின கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!

“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மே நாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும் நாளாக இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. (more…)

குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தம்; வலி. கிழக்கு மக்களுக்கு பாதிப்பு

வலி.கிழக்குப் பிரதேசசபை கடந்த நான்கு நாள்களாக இருபாலை, கோப்பாய் கிராமங்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தைத் திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் குடிதண்ணீர் இன்றிப் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். (more…)

நெடுந்தீவு – குறிக்கட்டுவான் படகு சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு - குறிக்கட்டுவான் பகுதிகளுக்கு இடையிலான படகு சேவை நேற்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

தந்தை செல்வாவின் 33ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

தந்தை செல்வாவின் 33 ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 9.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வா சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts