- Wednesday
- March 11th, 2026
வட மாகாண மக்களுக்கு மாத்திரம் மாகாண சபை அதிகாரங்களையும் உரிமைகளையும் அனுபவிக்க விடக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
யாழ் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் கதைத்து முடிவெடுக்கப்படும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் இங்கு மேற்கொண்டுவரும் சகல நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கமானது பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின்மூடி தெரிவித்துள்ளார். (more…)
வடக்குகிழக்கு மாகாணங்கள் உட்பட 16 மாவட்டங்களில் சமூக சேவைகள் அமைச்சின் கீழ் பணியாற்றுவதற்காக 168 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பில் வைத்து நியமனம் வழங்கப்படவுள்ளதாகச் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்திலும் சந்தன மரத்தை நாட்டி வளர்க்க முடியும் என்று நவக்கிரியில் அமைந்துள்ள சுதேச மருத்துவ திணைக்களத்தின் மூலிகைத் தோட்டத்தில் மூலிகை மரங்களை நாட்டிவரும் வைத்தியர்கள் நிரூபித்துள்ளனர். (more…)
திவிநெகும செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முருங்கைக் கன்றுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)
13வது திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறிவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்ப்பாணத்திற்கு நேற்று மேற்கொள்ளவிருந்த விஜயம் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. (more…)
விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)
யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவில் அரசாங்கம் சார்ப்பாக எவருமே கலந்துகொள்ளவில்லை. இந்த இறங்குதுறை திறப்பு விழாவினை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்தது. (more…)
பூநகரிக் கோட்டத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள், வட மாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை ஏற்று விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று விடுதலை செய்யப்பட்டார். (more…)
முல்லைத்தீவு, கேப்பாபிலவில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காக 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. (more…)
பொது பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரும் அந்த பரீட்சைகள் நிறைவடையும் வரையிலும் கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. (more…)
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.) என்பன இணைந்து போட்டியிடும் என்று, சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். (more…)
அரசிற்கு சொந்தமான பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற மூவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
யாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு என தனியான பிரிவு ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
