யாழ். இளைஞர் சேவை மன்றப் பணிப்பாளர் பதவி நீக்கம்?

யாழ்.இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் ரி.ஈஸ்வரராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினாலே இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். (more…)

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றம்

போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

செய் அல்லது செத்து மடி இதையே மனதில் நிறுத்துக; – அமைச்சர் குருகுலராஜா

உன்னால் முடிந்தால் செய்; அல்லது செத்துமடி'' என்ற வாசகத்தை உங்கள் மனக் கண் முன் தினமும் வையுங்கள். எமது பூமி சுதந்திரக் காற்றை உள்ளேயும் வெளியேயும் இழுத்துவிட வைக்க நீங்கள் தயாராகுங்கள் (more…)

வட மாகாண அமைச்சர் – இந்திய துணை தூதுவர் சந்திப்பு

வட மாகாண போக்குவரத்து மற்றும் கடற் தொழில் அமைச்சர் பி.டெனிஸ்வரனிற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவர் வே.மகாலிங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. (more…)

13 பிளஸ் 13 மைனஸாக மாறிவிட்டது: சிவாஜிலிங்கம்

13 பிளஸ் பிளஸ் 13 மைனஸ் ஆக மாறிவிட்டதாக தமிழர் விடுதலை இயக்க (ரெலோ) அரசியல் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினருமான கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

இராணுவம் தொடர்ந்து மக்களுக்கு உதவும்: யாழில் இராணுவத்தளபதி

இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். (more…)

நிலையான அபிவிருத்தி நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் – பொ.ஐங்கரநேசன்

எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பதும், எமது மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புகின்ற நிலையான அபிவிருத்தி என்பதும் நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் (more…)

வடமாகாண அமைச்சர்கள் மூவர் இன்று பதவியேற்றனர்

வடமாகாண சபையின் மூன்று அமைச்சர்கள் இன்று காலை தமது கடமைகளை யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகங்களில் பொறுப்பேற்றனர். (more…)

மக்களின் உரிமை பிரச்சினைக்கே முன்னுரிமை – ஆயர் இராயப்பு ஜோசப்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

பொதுநலவாய மாநாட்டுக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தவுள்ளதை தமது கூட்டமைப்பு எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன் கூறியுள்ளார். (more…)

இன்று யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் பதிவு!

காணாமற்போனோரின் உறவுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. (more…)

முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் சத்தியப்பிரமாணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். (more…)

வட மாகாண முதலமைச்சர் – யாழ். முஸ்லிம்கள் சந்திப்பு

யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சனிக்கிழமை சந்தித்துள்ளார். (more…)

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்கள்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு

முல்லைத்தீவுக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு பலத்தை வெளிக்காட்ட வேண்டும்: சம்மந்தன்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வன்முறைகள் மூலம் அடக்கப்படுவதற்கு எதிராக ஒற்றுமையோடு எங்கள் பலத்தை வெளிக்காட்ட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். (more…)

முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தம்

முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த வட மாகாண சபையின் ஒன்பது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

விடுதலைப் போரட்டத்தைக் கேவலப்படுத்தவா முள்ளிவாய்க்கால் பதவிப்பிரமாணம்? – முல்லை மக்கள் கேள்வி

தமிழீழ விடுதலைப்போரையும், புலிகளையும் ,மக்களின் இழப்புகளையும் கேவலப்படுத்தவதற்காகவா ‘இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும்’ சத்தியப்பிரமாணத்தை முள்ளிவாய்க்காலில் செய்யபோகிறீர்கள் என்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். (more…)

ஆயுதப்போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது: தயா மாஸ்டர்

தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். (more…)

எங்களை அடித்து உதைத்து எதிர்கட்சிக்கு போங்கள் என்று கூறினாலும் நாங்கள் போகமாட்டோம் – சிவாஜிங்கம்

தமிழரசு கட்சி எங்களை அடித்து உதைத்து எதிர்கட்சிக்கு போங்கள் என்று கூறினாலும் நாங்கள் போகமாட்டோம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார். (more…)

பதவியேற்பு நிகழ்வை ஏன் பகிஷ்கரித்தோம்?: புளொட்

2013 ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதியன்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts