எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும் – சிவமோகன்

எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். (more…)

தென்கொரியாவிற்கு விளையாடச் சென்ற நான்கு இலங்கையர்கள் மாயம்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தென் கொரியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஹொக்கி அணியின் வீரர்களில் நான்கு பேர் நாடு திரும்பவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

ஆழ்வாருக்கு இன்று தேர்

இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளவுள்ளார். (more…)

ஜெயலலிதாவுக்கு சிறையா?, பிணையா ?

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. (more…)

இருப்பிடத்தை உணர்ந்து கொள்வது குறித்த கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு

மருத்துவத்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, மூன்று நரம்பியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (more…)

மங்கள்யான் கார்ட்டூன் தொடர்பாக நியுயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியது

செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது. (more…)

கல்விச் செயற்பாடுகளில் ராணுவத்தலையீட்டை எதிர்த்து யாழில் ஆர்பாட்டம்

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி திங்களன்று, ஆசிரியர்கள், அதிபர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. (more…)

அனேகன் டைட்டில் ரகசியம் வெளிவந்தது!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் அனேகன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தர் நடிக்கிறார். (more…)

மிஷ்கினுடன் இணையும் சரத்குமார்: சிக்ஸ் பேக் வைத்து நடிக்கிறார்

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘நீ நான் நிழல்’. திரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஜான் ராபின்சன் என்பவர் இயக்கியுள்ளார். (more…)

இழுவைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தங்களின் இழுவைப்படகு தொழிலுக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாற்றுத் தொழில் நடவடிக்கையை ஏற்படுத்தித் தருமாறு கோரியும் யாழ். வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியிலுள்ள இழுவைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை (06) ஈடுபட்டுள்ளனர். (more…)

வடமாகாண சாலைகளுக்கு 75 பேருந்துகள் வழங்க நடவடிக்கை

'எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலைகளுக்கு 75 பேருந்துகள் வழங்கப்படவுள்ளன. (more…)

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி தொடர்பிலான விபரம், வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண பிரதம செயலக அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

தண்டச்சீட்டு விவகாரம்; துவாரகேஸ்வரன் கைது

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரான தி.துவாரகேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை(05) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

எமது கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தும் இழுவைப்படகு தடைசெய்யப்பட்டதல்ல – சிவாஜி

தென்னிலங்கை மீனவர்கள் இழுவைப்படகினை பயன்படுத்துவதுடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். (more…)

அரசாங்கத்திடம் 100 மில்லியன் நஷ்டஈடு கோரி கொழும்பு பல்கலை மாணவி வழக்கு!

முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது கையைத் துண்டிக்க காரணமான இரு வைத்தியசாலைகளின் ஊழியர்கள் செயற்பட்டனர். எனவே அரசாங்கள் தனக்கு 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டும். (more…)

விக்ரம் – ஹரி கைகோர்க்கும் சாமி இரண்டாம் பாகம்!

'ஐ' படம் கத்தியுடன் மோத விரும்பாமல் தற்போது மேலும் ஒருமாதம் தள்ளி வெளியாக திட்டமிட்டு வருகிறது. (more…)

த.தே.கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதிவுசெய்யப்படவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் (more…)

பஸ் தரிப்பிடங்களை அமைப்பதற்கு அனுமதி பெற வேண்டும் – டெனீஸ்வரன்

பஸ் தரிப்பிடங்களை அமைக்கும் தனியார்கள் இனிவரும் காலங்களில் வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா. டெனீஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார். (more…)

உயிர்பாதுகாப்பு பொலிஸ் பிரிவினால் 27 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

யாழ்.கசூரினா கடற்கரையில் கடமையில் ஈடுபட்டு வரும் உயிர்பாதுகாப்பு பொலிஸ் பிரிவு இதுவரையில் 27 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக வடமாகாண உயிர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி இன்று எம்.ஹேரத் திங்கட்கிழமை (06) தெரிவித்தார். (more…)

யாழ். இளைஞன், இறம்பொடையில் மரணம்

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த 24 வயதான நாகராசா விஜலேந்திரன் என்ற இளைஞன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts