- Sunday
- May 5th, 2024
யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துகின்றது. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தால்,...
வடமராட்சிகிழக்கில் மணல்ஏற்றும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு இயங்கும் 1000 கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மணல் சேவையில் ஈடுபடும் வடமராட்சி கிழக்கு மக்கள் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக மணல் விநியோகத்தினையே தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கடந்த 5 வருடங்களாக...
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஓட்டோ - தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பிரதான வீதியும் முதலாம் குறுக்குத் தெருவும் இணையும் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே மரணமாகினர். இருவரும்...
சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த இலங்கையர் என்ற பெருமையை குமார் சங்கக்காரா தனதாக்கிக் கொண்டுள்ளார். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று முந்தினம் (29) வெலிங்டனில் இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை வீரர்களின் பொறுமையான ஆட்டத்தின்...
2015 - 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஆங்கில மொழி மூலமான இந்தியாவின் காந்தி புலமைப்பரிசில் கற்கை நெறிக்கு இலங்கை உயர் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 22 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து மேற்படி விண்ணப்பங்களை உயர் கல்வி அமைச்சு அதன் இணையத்தளத்தினூடாக கோரியுள்ளது. எனவே விண்ணப்பங்களை www.mohe.gov.lk எனும் இணையத்தளத்தினூடாக பிரவேசித்து பெற்றுக்...
இதுவரையில் மின்கட்டண நிலுவை செலுத்தாமல் இருப்பவர்கள் தங்களுடைய மின்கட்டண நிலுவையை சனிக்கிழமை (31)ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் யாழ்.பிரதேச பொறியியலாளர் ச.ஞானகணேசன் வெள்ளிக்கிழமை (30) கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மின்கட்டண நிலுவையை செலுத்தாமல் பலர் உள்ளனர். அவர்கள் தங்களுக்குரிய மின்கட்டணத்தை...
புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பிரபல்யமான பாடசாலைகளில் சேர்த்துகொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள்....
அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் இலங்கை வரவுள்ளார். இவர் இலங்கையில் தங்கியிருக்கும் போது, போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பெர்றுப்பக் கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே நடத்தப்படவுள்ளன. 2011ஆம் ஆண்டு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் இடைநிறுத்தி...
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கையில்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகளை வடபகுதியைச் சேர்ந்த மக்களும் பொதுவாக வரவேற்றுள்ளனர். எனினும், அவற்றில் குறைபாடுகள் இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன்படி, அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின்...
இலங்கையின் 44 வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒய்வு பெற்றுள்ள நிலையிலேயே கே. ஸ்ரீபவன் புதிய தலைமை நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார். யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கே. ஸ்ரீபவன் 1974 ம் ஆண்டு சட்டக் கல்லூரியில் இணைந்து...
ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ஷங்கர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எந்திரன் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தார். ரூ 375...
என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டமாக பல தகவல்கள் உங்களுக்காக இதோ... முதலில் கதாபாத்திரங்களாக அஜித், சத்யதேவ், சத்யா என இரண்டு கெட்டப்பில் வருகிறார். அதேபோல் த்ரிஷா ஒரு நடனக்கலைஞராக ஹேமானிகா என்ற பெயரில் அஜித்தின் ஜோடியாகவும், அனுஷ்கா ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெண்ணாக தேன் மொழி...
பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் குறைப்பது தொடர்பில் ஆராய்வதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கோதுமை மாவின் விலை 12 ரூபா 50 சதத்தினால் குறைக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கூறினார். இதேவேளை முச்சக்கரவண்டி கட்டணங்களை 10 சதவீதத்தாலும்,...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நுழைவாயில் மீது புதன்கிழமை (28) நள்ளிரவு, இனந்தெரியாதோரால் பெயின்ட் ஊற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. பழைய மாணவர்களின் நிதியுதவியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் மீதே இவ்வாறு பெயின்ட் வீசப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் கறுப்பு நிற வர்ணம் தீட்டப்பட்டிருந்த நுழைவாயிலுக்கு நீலம் மற்றும் வெள்ளை...
இலங்கையில் பிறந்த அனைவரும் இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5 இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும் எனவும் இலங்கையில் 10 மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட...
இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மென்பொருள் பல்தேசிய நிறுவனமாகிய WSO2 இன்று தனது கிளை நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை இங்கே
எதிர்வரும் 31.01.2015 காலை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை 'பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்தினை மேற்கொள்வதென யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. இப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்தும் முயற்சிக்குத் தங்கள் ஒத்துழைப்பினை நல்குமாறு பல்கலைக்கழக சமூகத்தினரையும் பல்கலைக்கழக நலனில்...
புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைகால வரவுசெலவு திட்டம் 2015ல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை விபரங்கள் கீழ்வருமாறு... அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10 000 ரூபாவாக அதிகரிப்பு : அதில் 5000.00 ரூபா பெப்ரவரி மாதமும் மிகுதி 5000.00 ரூபா எதிர்வரும் ஜூலை மாதமும் அதிகரிக்கப்படும். இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் இவ்வாண்டு 47 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts