Ad Widget

வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2014 – 2015 ஆம் கல்வியாண்டில் வியாபார முகாமைத்துல இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக்கற்கை நெறியானது விசேட அனுமதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதால் 2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியெய்திய அனைத்துப்பிரிவு மாணவர்களும் (கலை, வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ) விண்ணப்பிக்கலாம்.

இதற்கான மேலதிக விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள மாணவர்கள் கையேட்டின் மூலம் அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Related Posts