சட்டவிரோத குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆகக்கூடாது

சட்டவிரோத குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆகக்கூடாது என யாழ்.பல்கலைக்கழக சமூகம் சபதம் எடுத்துள்ளது.

புங்குடுதீவு மாணவியின் படுகொலை நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கண்டன போராட்டத்தின் பின்னரே யாழ்.பல்கலைக்கழக சமூகம் அவ்வாறு சபதம் எடுத்துக்கொண்டது.

அத்துடன் அவ்வாறான குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆகும் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான மாபெரும் போராட்டத்தினை முன்னெடுப்போம் எனவும் பல்கலைக்கழக சமூகம் எச்சரித்துள்ளது.

Related Posts