Ad Widget

த.தே.ம.மு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு தடை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் குறித்த நினைவு தினத்தை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அன்றையதினம் அதே பகுதியில் நினைவு தினத்தை நடத்தவுள்ளதால் இரு கட்சிகளுக்குள்ளும் முரண்பாடு ஏற்படலாம் என பொலிஸ் புலனாய்லாளர்கள் கூறியதாக முல்லைதீவு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முல்லைதீவு நீதிமன்றம், அந்தப் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவு தின நடவடிக்கைகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது, என அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குறித்த தினத்தில் வேறொரு இடத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts