Ad Widget

ஏன் “நிர்பயா ஆவணப்படம் எடுத்தேன்” விளக்கும் இயக்குநர்!!

கடந்த சில தினங்களாக இந்தியாவின் ஊடகங்கள் அனைத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது, நிர்பயாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான். காரணம் இந்த ஆவணப்படத்தில் பேட்டி அளித்த குற்றவாளியின் திமிர்த்தனமான பேச்சு. பிபிசி சார்பாக பெண் இயக்குநர் லெஸ்லி உட்வின் என்பவர் ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆவணப்படத்திற்காக...

விபத்து: ஒருவர் பலி, ஐவர் படுகாயம்

முல்லைத்தீவு, முறிகண்டி செல்வபுரம் பகுதியில் சனிக்கிழமை (07) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், சாரதி...
Ad Widget

மீண்டும் மக்கள் காணிகள் சுவீகரிப்பு

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மருதங்கேணி...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் திகதி 31 வரை நீடிப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப்பத்திரம் ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினம் இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் தினம் நேற்றுடன் (6) முடிவடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

லண்டனில் “யாழ் வுட்” என்னும் ரகசிய தடுப்பு முகாம்!

லண்டனில் "யாழ் வுட்" என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். "யாழ் வுட்"...

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் இருக்கிறார்களா? பிரதமரிடம் டக்ளஸ் கேள்வி

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்களா என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமற் போனவர்களின் உறவுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கையொன்றை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது முன்வைக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் அவர் விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் காணாமற் போனதாகக் கூறப்படும் தமிழ்...

சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்தார்!

இலங்கைக்கு பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ளமையால் அவரது வருகைக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டே வௌிவிவகார அமைச்சர் நேற்று (06) தனது இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். சுமார் 25 வருடங்களுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் இலங்கைக்கு...

“பேடே” இல்லாமல் “கீப்பிங்” செய்த கேப்டன் டோணி

ரொம்ப வினோதமாக இருந்தது அந்தக் காட்சி. கேப்டன் டோணி, நேற்று பேட் கட்டிக் கொள்ளாமல் சில பந்துகளுக்கு கீப்பிங் செய்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். எல்லாம் சில்லித்தனமான காரணத்திற்காகத்தான்.. பயந்துடாதீங்க.. சில்லி பாயிண்ட்டில் பீல்டிங் செய்த அஜிங்கியா ரஹானேவுக்காக தனது பேடைக் கழற்றிக் கொடுத்து விட்டு தான் வெறும் காலுடன் கீப்பிங் செய்தார் டோணி. அஸ்வின்...

நேரில் வருத்தம் தெரிவித்த தியாகு : போராட்டத்தை கைவிட்ட தாமரை

மனைவி தாமரையையும்,அவரது மகனையும் கணவர் தியாகு நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததோடு வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் கடந்த 8 நாட்களாக தாமரை நடத்திய போராட்டம் முடிவிற்கு வந்தது. திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரைக்கும், அவருடைய கணவரும், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தலைவருமான தியாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...

நைஜீரியாவில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை

நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர், நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நஜாபா என்ற அந்தக் கிராமத்திற்குள் புகுந்த துப்பாக்கிதாரிகள், வீடுகளைப் பார்த்துச் சுட்டனர். பிறகு கிராமத்திற்குத் தீ வைத்தனர் என இந்தத் தாக்குதலில் தப்பியவர்கள் தெரிவித்தனர்....

திரையுலகிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலத்தின் இழப்பு

ஆடுகளம் படத்திற்காக சிறந்த எடிட்டர் என தேசிய விருது வாங்கியவர் கிஷோர். இவர் பல ஹிட் படங்களில் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூளையில் இரத்தம் உறைந்ததால் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் மூளை செயலிழந்தது. இதனையடுத்து அவரின் உடலுறுப்புகளை தானம்...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – குஷ்பு

டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்ற குற்றவாளி முகேஷ சிங் பி.பி.சிக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெண்களை பற்றி இழிவான கருத்துக்களை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கண்டனங்கள் கிளம்பியுள்ளன. நடிகை டாப்சி கடவுள் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளி முகேஷ்சிங்கை நானே கொலை செய்வேன் என்று ஆவேசமாக கூறினார். நடிகர்...

கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான் – சுருதிஹாசன்

கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான் என்று சுருதிஹாசன் கூறினார். இது குறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:– இசைப்பணிக்கும் எழுதுவதற்கும் வயதோடு சம்பந்தம் இல்லை. எந்த வயதிலும் எழுதலாம். பாடலாம், இசையமைக்கலாம். ஆனால் நடிப்புப் அப்படி அல்ல. கதாநாயகியாக இருப்பது கொஞ்ச காலம்தான். நீண்ட நாள் கதாநாயகியாக நீடிக்க முடியாது. இதில் நடிகர்கள் விதி...

விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் நோர்வே தூதுவர் சந்திப்பு

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கண்டி வீதி, அரியாலையில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வலிகாமம் பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள...

ஜெயக்குமாரியை உடன் விடுதலை செய்யுங்கள்! கொழும்பில் நீதிமன்றத்திற்கு முன்னால் கோஷம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்றது. மன்னார் மாதர் அமைப்புடன் இணைந்து பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஜனநாயக...

நாடு முழுவதும் வை-பை இணைப்பு அரசாங்கம் நடவடிக்கை!

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச 'வை - பை' (wi-fi)இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச வை...

நோர்வே தூதுவர் முதலமைச்சர் சந்திப்பு!

இலங்கையில் நடந்ததைக் கூறி, நடந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான் நாம் முன்னேறமுடியும். அதன்மூலமே மக்களிடம் நல்லெண்ணத்தையும் சௌகரியத்தையும் ஏற்படுத்தமுடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நோர்வே தூதுவர் கில்டி ஹரல்ற்சட், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இன்று முற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள்...

பகீரதியை 90 நாள்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கடற்புலி மகளிர் அணி தலைவி ஜெயகணேஸ் பகீரதியை 90 நாள்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 41வயதான பகீரதியும் அவரது 8 வயது மகளும் கடந்த மாதம் கிளிநொச்சி, பரந்தனுக்கு வந்து மீண்டும் பிரான்ஸுக்கு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான...

காணாமற்போனவர்களை மீட்டுத் தரக்கோரி நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம்!

காணாமற்போனவர்களை மீட்டுத் தரக்கோரியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று வெள்ளிக்கிழமை காலை நல்லூர் ஆலயச் சூழலில் உண்ணாவிதப் போராட்டம் ஆரம்பமாகியது. காணாமற்போனோரின் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்துக்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காணாமற்போன ஒருவரின் மனைவி என்ற அடிப்படையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்...

வடக்கில் புதிய கட்சி அங்குரார்ப்பணம்

ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று நேற்று வியாழக்கிழமை (5) உருப்பெற்றுள்ளது. ந.தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சி' வவுனியாவில் வைத்து அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகவும் பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நிறைவேறியது....
Loading posts...

All posts loaded

No more posts