- Sunday
- September 14th, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யும் என்றும் ஊவா...

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும்...

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நள்ளிரவு முதல் 450 கிராம் எடைகொண்ட ஒருஇராத்தல் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர். தாக்குதல்...

ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய...

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் செயற்கை நிறம் கொண்ட அல்லது நிறமற்ற வெள்ளை சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த 3...

நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, நாளை மறுதினம் 9000 மெட்ரிக் தொன் பெட்ரோல் நாட்டை வந்தடையவுள்ளது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவின் மூலம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு மறைமுகமாக சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக இதுவரை சீனா ஆயுதங்களை வழங்கவில்லை, இனியும் வழங்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவொன்றிின் மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை இதனை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா பிரச்சினை மற்றும் தைவான் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக...

அண்மையில் வடமராட்சி கிழக்கு பொதுளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் மேலும் நால்வர் நேற்று(15) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். நேற்று(15) காலை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த நால்வரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து கைது செய்யப்பட்டனா். பின்னா் கைது செய்யப்பட்டவா்கள் கிளிநாச்சி...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவா் ஒருவர் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை கண்ட ஏனைய மாணவர்கள் அவாின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த...

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டொலரின் விற்பனை கொள்முதல் விலை 300.51 ரூபாய்யாக பதிவாகியுள்ளது. இதேவேளை இதன் விற்பனை விலை ரூ.319.66. பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - ஆஸ்பத்திரி வீதி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞனை மறித்துள்ளனர். இவ்வாறு மறித்த...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதால் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பறையநலாங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தபோதே குறித்த...

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. சிறுதானிய உணவுகளான கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இங்கு காட்சிப்...

யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவிகள் இருவரில் ஒருவர் யாழ்.கோட்டைப் பகுதியில் வைத்து பாடசாலை சீருடையுடன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. மற்றைய மாணவி வெளிமாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த நிலையில் வெளிமாவட்டத்தில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு மாணவிகளில்...

நாட்டில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கமைய, 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுதொடர்பான வழக்கினை அவதானி;ப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு எழுதியுள்ள கடித்தில் புலம்பெயர் அமைப்புகள்...

தம்மில் இருந்து மாறுபட்டு சிந்திப்பவர்களை துரோகிகளாகவோ அல்லது அரசாங்க அணியில் பயணிப்பவராகவோ அடையாளப்படுத்துகின்ற பண்பு ஏதோவொரு வழியில் எமது தமிழ் அரசியல்வாதிகளிடம் வந்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், மாறுபட்ட நிலைப்பாட்டாளர்களைத் துரோகிகளாக சித்தரிப்பது எமது தரப்பிலுள்ள பலவீனத்தையே காண்பிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (14) இடம் பெற்றது. கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி எங்களோடு நடத்திய பேச்சு வார்த்தையிலும்...

All posts loaded
No more posts