பொலிஸ் உத்தியோகஸ்தரின் மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய மர்ம நபர்கள்!

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இன்று(23) மர்ம நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடமை நிமித்தமாக மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், தனது மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு வீடொன்றுக்கு விசாரணை மேற்கொள்ளச்சென்றுள்ள நிலையிலேயே அவரது மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ வைத்தவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில்...

நெல்லியடியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

வடமராட்சி – நெல்லியடி மாலிசந்தி பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த மண்டபத்தில் மாவீரர்களின் பெயர் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வருகைதரும் மக்கள் மாவீரர்களுக்கு மலர்தூபி அஞ்சலி செலுத்தி வருகின்றமையும் காணக்கூடியதாக உள்ளது. குறித்த மண்டபத்தில் மாவீரர் வார இறுதி நாளான நவம்பர் 27 வரை அஞ்சலி...
Ad Widget

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

நாவற்குழி பகுதியில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வசித்து வரும் நபரொருவர் அண்மையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்த வேளை, தனது காணிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது குறித்த காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து காணி உரிமையாளரால் இது குறித்து பொலிஸ் நிலையத்தில்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: அந்த நாட்டின் மலுக்கு மாகாணத்திலுள்ள டொபேலோ நகருக்கு 94 கி.மீ. வடக்கே 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கங்களின் அதிா்வுகள் அருகிலுள்ள தீவுகளில் நன்கு...

உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!!

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு இலக்கம் SC/FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கு இலக்கம் SC/FR/254/2023 மனுதாரர்களினால் மீள பெறப்பட்டது. அதன்படி, இலங்கைப் பரீட்சை திணைக்களம் இந்த...

யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது!!

யாழில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்து, இளைஞர் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் ,...

இடி, மின்னலுடனான மழை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பலத்த மின்னலுடனும் இடிமுழக்கத்துடனும் கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்தி மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன்...

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த...

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...

நல்லூரில் மாவீரர்களின் பெயர்களுடன் நினைவு மண்டபம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது. இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட...

போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், காசா மீது தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 50 - 100 பணயக் கைதிகள் விடுதலை...

சீனிக்கு தட்டுப்பாடு : அதிகபட்ச சில்லறை விலையும் நீக்கம்!!

உள்ளுர் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட முந்தைய வர்த்தமானி அறிவித்தல், இதன் மூலம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. பொதி செய்யப்படாத 1 கிலோ...

நீதிபதி பதவி விலகல் : பொது பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பெறுவதற்காக காத்திருக்கும் சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் வழங்குவார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக இலங்கை...

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கொண்டு செல்லப்படவுள்ள அலெக்ஸின் மரணம் தொடர்பான முறைப்பாடு!

அலெக்ஸின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு எதிராக உரிய நடடிவக்கைகளை எடுப்போம் என ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞனின் மரணம் குறித்தான கண்ணீர்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழில் சட்டக்கல்வி வேண்டும்!! : விரிவுரையாளர் இளம்பிறையன்

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி மும்மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலத்தில் மட்டும் கற்கை நடத்தப்பட்டு வருகின்றது, ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும்...

A9 வீதியில் உள்ள 46 மரங்களை அகற்ற நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் 46 மரங்களை முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடவடிக்கைக்கு போக்குவரத்து...

நீதியான விசாரணை இடம்பெறும்!! – பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள ஜெனரத் தெரிவித்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகந்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைது...

மாவீரர் வாரம் ஆரம்பம் : யாழ் பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி!!

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதேவேளை...

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்குப் பிணை!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்றின் விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்துள்ளனர். இந்நிலையில் தனது நண்பனுடன் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் இருவரையும்...

எழுவைதீவு வைத்தியசாலையில் சுகாதார சேவையை பெறுவதில் மக்கள் அசௌகரியம்!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட எழுவைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஒழுங்காக வருகை தருவதில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, சுமார் 700 பேர் வசிக்கும் அடிப்படை வசதிகள் அற்ற குடும்பங்கள் வாழ்ந்து வரும் தீவுப் பிரதேசமாக எழுவைதீவு விளங்குகிறது. குறித்த பிரதேசத்தில் வெளிநாட்டில் வசிக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts