யாழிலிருந்து 35 பயணிகளுடன் விமான நிலையம் வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பிடித்தது!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவம் குறித்து பஸ்ஸின் சாரதி கூறுகையில், புதன்கிழமை (23) இரவு...

உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட தரப்பினரை அறிவுறுத்தியும் இதுவரை பதில் இல்லை!!

யாழ்.மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்.நல்லூரில் ஒரு கப் பால் தேனீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது தொடர்பில் அரசாங்க அதிபரை தொடர்பு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடயம் தொடர்பில்...
Ad Widget

சண்டிலிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது!!

சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 23, 24 வயதைதுடைய மானிப்பாயைச் சேர்ந்த சந்தேகநபர்களை கைதுசெய்ததுடன் வன்முறைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு...

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) இடம்பெற்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடும் வெப்ப நிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். உடலால் உணரப்படும் இந்த வெப்பநிலையை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அதிகூடிய வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் நேற்று முன் தினம் பதிவாகிய நிலையில்,...

நிலவின் மேற்பரப்பை படமாக்கிய சந்திரயான்: 14 நாட்களில் என்ன நடக்கும்!!

சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அனுப்பியுள்ளது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டர் கலன் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதையும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவளைதள பதிவில், சந்திரயான் -3 திட்டத்தின் லேண்டர் கலனுக்கும் பெங்களூருவிலுள்ள கட்டுப்பாட்டு...

புடினுக்கு எதிராக களமிறங்கிய வாக்னர் படை தலைவர் உயிரிழப்பு

புடினுக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்ட வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார். விமான விபத்தொன்றில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்வெர் பிராந்தியத்தில் உள்ள குசென்கினோ கிராமத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. இதேவேளை விபத்து நடந்த இடத்தில் எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில்...

அமெரிக்க தூதர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார். தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு, விஜயம் செய்து...

சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம்!!

பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனஅழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்நோய்கள் வரும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், சிறு வயதிலேயே மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்!!

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர். இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி...

சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் உல்லாசக்கப்பல்!!

வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், நேற்று முன்தினம் (21) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ”சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு வருகை தரும் கோர்டிலியா என்ற உல்லாசப்பயணக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது” தொடர்பில் இக்கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட காணி ஆணையாளர், யாழ் இந்திய...

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது!!

லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில் நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையில் இடம்பெற்றிருந்தது. சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை...

ரஷ்யாவில் தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்!!

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் விமானமொன்று தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்கே Soltsy-2 இராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த Tupolev Tu-22 போர் விமானமே இவ்வாறு தீக்கிரையானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Tu-22 போர் விமானமானது ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் உக்ரைனில் உள்ள நகரங்களை...

குருந்தூர்மலை வழக்கை முல்லைத்தீவு நீதிபதியிடமிருந்து மாற்றுங்கள்!!

குருந்துர் மலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் மூக்குடைபட்ட பௌத்த இனவாதிகள், தற்போது முல்லைத்தீவு நீதவானை குறிவைத்துள்ளனர். முல்லைத்தீவு நீதவானுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் நேற்று (21) எழுத்துமூல கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயம், அங்கு கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது. ஆகவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட...

யாழில் குப்பையோடு குப்பையாக வீசப்பட்ட தங்க நகைகள்!

யாழில் திருடர்களுக்குப் பயந்து குப்பைகளோடு குப்பையாக வைத்திருந்த 8 பவுன் பெறுமதியான தங்க நகைகள் எதிர்பாராத விதமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மண்டுவில் வட்டாரப் பகுதியேிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுன் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும்...

13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது!

“தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது” என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு...

சண்டிலிப்பாயில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் : வீடு தீக்கிரை!

சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதோடு, வீட்டின் பொருட்களும் சேதமடைந்துள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று நால்வர் கொண்ட இனந்தெரியான கும்பலினால் தாக்கப்பட்டுள்ளது. முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர், அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை...

நல்லூரில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் நேற்று...

விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இல்லை!!

விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார் வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக...
Loading posts...

All posts loaded

No more posts