அடுத்த செவ்வாய்க்கிழமை பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் தொடர்ச்சியாக 14 நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவ வல்லுநர் லக்குமார பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள நிலையில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் சங்கமும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.