மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி...

அ.தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.கவில் இணைந்த முக்கிய புள்ளிகள்!

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இன்று இணைந்து கொண்டனர். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக துண்டை அணிவித்து வரவேற்றார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட் சத்திர...
Ad Widget

மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம்(01.07.2026) காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே...

சொந்த மண்ணை மீட்க ஒன்றுபட்ட பலாலி மக்கள்!!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் எனக் கூறி, கடந்த 36 வருடங்களாக...

விடுதலைப் புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் (STF) கடந்த திங்கட்கிழமை(29) மாலை மீட்கப்பட்டிருந்தது. திருக்கோவில், சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக, கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டிய காட்டுப் பகுதியில்...

எனது மனைவியின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்!! – கண்ணீருடன் கணவர்

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

பதின்ம வயதினரிடையே பாலியல் நோய் அதிகரிப்பு!!

பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அரசாங்கம்...

ஜனநாயகன் படத்திற்கு A தணிக்கை சான்றிதழ்!! இந்த மாதமே ரிலீஸ்!!

ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகர் விஜய். அரசியலில் கால் பதித்து அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த விஜய் இப்போது முதலமைச்சர் பதவியில் கெத்தாக உட்கார்ந்துள்ளார். சினிமாவில் இருந்து விஜய் விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் இப்போது முதலமைச்சராக...

”Ladies & Ladies” யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக்!

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா, கியாரா அத்வானி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாக்சிக் திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், டாக்சிக் திரைப்படத்திலிருந்து 'Ladies & Ladies'...

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு புதிய நோயாளர் காவு வண்டி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய நோயாளர் காவு வண்டி (Ambulance) ஒன்று நேற்று முன்தினம் (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு!!

பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100...

பேருந்து ஊழியர்களுக்கு முறைப்பாடு இலக்கத்துடன் சீருடை!

வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (01) நடைபெற்றது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்....

‘மேல் நடுத்தர வருமான’ நாடாக இலங்கை! – உலக வங்கியின் புதிய தரவரிசை

கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ள இலங்கை, தற்போது உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலில் 'மேல்-நடுத்தர வருமான' (Upper-middle Income) நாடாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 01 ஆம் திகதி வெளியிடப்படும் உலக வங்கியின் வருமானக் குழு வகைப்படுத்தலின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய...

செல்லப் பிராணிகள் தொடர்பில் அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் செல்லப் பிராணிகளை பதிவு செய்தல் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் அதனை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்றில் முன்வைப்பதற்குமான யோசனை ஒன்றை பொது நிர்வாகம், மாகாண சபை...

கொங்கோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நேற்றைய (1) போட்டியில் இங்கிலாந்து மற்றும் கொங்கோ ஆகிய அணிகள் மோதின. போட்டியின் முதல் 7வது நிமிடத்தில் கொங்கோ அணி முதல் கோலை பதிவு செய்து முன்னிலை வகித்தது. எனினும் இங்கிலாந்து அணியினால் முதல் பாதியில் எவ்வித கோலையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடுமையான சவாலுடன் இரண்டாம் பாதியில்...

செனகலை வீழ்த்திய பெல்ஜியம்!!

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது. பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம்...

அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதியில்லை!!

ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்....

நீர் கட்டணம் தொடர்பில் அரசு எடுத்த முடிவு!!

இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்காக சபைக்கு பெரும் செலவு ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை...

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!!

கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 ஆகும் என அந்த அதிகார சபை...

நியூயோர்க்கின் உயரமான கட்டிடத்தில் காதல் ஜோடி செய்த காரியம்!!

நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் அரச கட்டிடத்தின் உயரமான கோபுர உச்சியின் மேல் ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை செய்ததாகக் கூறப்படும் இளம் ஜோடியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகசங்களில் ஈடுபடும் எஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச...
Loading posts...

All posts loaded

No more posts