Ad Widget

எரிபொருள் விலை குறைப்பு!! – அமைச்சர் அறிவிப்பு

அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்றும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆகவே எரிபொருள் விலையில்...

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி!

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலை நேற்றை தினத்தை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின்படி இன்று டொலரின் கொள் விலை 314 ரூபாயாகவும் விற்பனை விலை 330 ரூபாயாகவும் பதிவாகியுள்ளன.
Ad Widget

யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தை இராணுவத்திரிடம் கையளிப்பு??

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை என கூறியுள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன், ஆனால் கடந்த வருடம் குறித்த கட்டிடத்தை தமக்கு வழங்குமாறு இராணுவ தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டமை உண்மை எனினும் அந்த கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சு நிராகரித்துவிட்டது எனவும் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக...

மதுபானம் பருக்கி சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு!! இருவர் கைது!

அச்சுவேலி - தென்மூலை பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும் சிறுமி போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. அச்சுவேலி தென்மூலை...

IPL போட்டியில் யாழ் வீரர் வியாஸ்காந்த்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும்,...

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி மகிழ்ச்சியளிக்கின்றது – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த உதவியினால் இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை...

முல்லைத்தீவு கிராம மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லையில் உள்ள தமிழ் கிராமமான கொக்குத்தொடுவாய் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சுவீகரிக்கும் நோக்கோடு அளவீடுகளை செய்து காணிகளுக்கு நடுவே எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நில அளவை திணைக்களம் காணி...

3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை!!

தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ◾Fast3Cycle International Pvt Ltd ◾Sport Chain App Sport Chain ZS Society ◾Srilanka Onmax...

சீன ஜனாதிபதியிடம் புடின் பகிரங்கமாக வெளியிட்ட கருத்து

சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கின் அரசுப் பயணத்தின் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், முறைசாரா...

பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்!!

பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி கஞ்சா கடத்தி சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதியும் பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடிகாமம் பொலிஸ்...

யாழில் தாய்ப்பால் கொடுக்க மறுத்ததால் உயிரிழந்த குழந்தை!!

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையின்...

யாழில் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்!!

தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். ஜீ தமிழ் சூப்பர் ஜோடி படப்பிடிப்புக்காக அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அவர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இன்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு : கற்றல் நடவடிக்கைள் பாதிப்பு!!

பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை 12வது நாளாக தொடர்கிற நிலையினுள் பல்கலை கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி மின்சாரம் மற்றும்...

மதுபானம் பருக்கி சிறுமிக்கு கூட்டு வன்புணர்வு!! பொலிஸார் அசமந்தம்!!

பதின்ம வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்து அறிக்கை பெற்றுக்கொள்ளத் தவறிய அச்சுவேலி பொலிஸார், சிறுமியின் தாயாரை மகளை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறி அனுப்பியுள்ளனர். அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுசாராயம் பருக்கப்பட்டு...

பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்!

காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்ற வேளை குறுக்கிட்ட குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு சிறுமி அழைத்துச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய...

நிலநடுக்கம் குறித்து இலங்கை வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்தார்....

சில பிரதேசங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை...

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புதிய தவணை பாடசாலை நடவடிக்கைகள் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

புடினின் மரியுபோல் பயணத்திற்கு உக்ரைன் கொடுத்த பதிலடி!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்ட சென்றமைக்கு உக்ரைன் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு புடின் நேற்று இரவு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த புடின், அங்கிருந்த கலை பாடசாலை, குழந்தைகள் மையம் மற்றும் Nevsky microdistrictயில் வசிப்பவர்களையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் “குற்றவாளி எப்போதும்...

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது....
Loading posts...

All posts loaded

No more posts