Ad Widget

இன்று முதல் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த நேர மாற்றத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகல் நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில்...
Ad Widget

வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்கம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2N இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி...

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்க-சம்பந்தன் உடன்படிக்கை வேண்டும் – சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

யாழ். பல்கலையில் மாவீரர் தின நினைவேந்தல் ஆரம்பம்!!

மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள்...

யாழ்ப்பாணத்தில் 120 மில்லியன் ரூபாய் மோசடி : சகோதரிகள் கைது

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த இரு சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 30 மற்றும் 34 வயதுடைய யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இவர்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை 2021 ஜனவரி முதல்...

பருத்தித்துறையில் மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி !

பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள்...

நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம்!! – ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன்!

நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி விசேட பிரிவு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அவர்கள்...

மாதத்திற்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம்!!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய மாதத்தில் ஒரு முறை விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்றமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(20.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை...

பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையில் பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒருவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கம் பிறக்கும் போதே புதிய பிறப்புச் சான்றிதழில் பதியப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது காணப்படும் பெற்றோரின் திருமணம் தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் பகுதியும் நீக்கப்படவுள்ளது.

ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கையை பகிரங்கமாக அறிவித்த உக்ரைன் ஆயுதப்படை

உக்ரைனுடனான போர் தாக்குதலில் ரஷ்யா கிட்டத்தட்ட 84,210 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைனிய ஆயுதப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த மற்றும் ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரை உக்ரைனிய படைகள் மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஒட்டுமொத்த ரஷ்யாவும், ஜனாதிபதி புடினும் தயாராக இருப்பதாக மாஸ்கோ அறிவித்து வருகிறது....

சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்!! திருநெல்வேலி சிறுவர் பராமரிப்பு நிலைய காப்பாளர் கைது!!

யாழ்.திருநெல்வேலியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 12 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்க கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர். அதன் அடிப்படையில் விடுதிக் காப்பாளரான குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின் சந்தேக...

யாழ். மாநகர மேயருக்கும் ஐ.நா. சபையின் குழுவினருக்கும் இடையே விஷேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு,...

பாடசாலை உபகரணங்களின் விலை தொடர்பான அறிவிப்பு!!

செஸ் வரி திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். [caption id="attachment_115903" align="aligncenter" width="548"] Stationery isolated on white[/caption] இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். செஸ் வரி மாற்றத்தால் பாடசாலை...

சட்டவிரோத காலபோக நெற்செய்கையால் கிளிநொச்சியில் அமைதியின்மை!

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில், சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டினால், அங்கு அமைதியின்மை நிலவியது. நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனை, அழிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் சென்ற வேளை, அவர்களுக்கும் சட்டவிரோதச் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான...

யாழில் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி!

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகையில் மரநடுகை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வருவதோடு, மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடமும் மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் வகையில் இம்மாதம் இன்று 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – வலிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிப்பு!

ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் உதவிச் செயலாளரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும்...

இனப்பிரச்சினைக்கான தீர்வாக சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம் – சித்தார்த்தன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் தெரிவுக் குழு, ஆணைக்குழு அமைத்து நிதியை செலவு செய்யாமல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்த பிராந்தியங்களின் ஒன்றிய தீர்வு திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம். விட்டுக் கொடுப்புடன் அரசாங்கமும் செயற்பட வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.17) இடம்பெற்ற...

நாட்டின் சில பகுதிகளில் மழை, பலத்த காற்று வீசக்கூடும்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை சனிக்கிழமை (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை நெருங்குவதற்கு அதிக...
Loading posts...

All posts loaded

No more posts