Ad Widget

சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்!! திருநெல்வேலி சிறுவர் பராமரிப்பு நிலைய காப்பாளர் கைது!!

யாழ்.திருநெல்வேலியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 12 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்க கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

அதன் அடிப்படையில் விடுதிக் காப்பாளரான குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின் சந்தேக நபர் இன்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Related Posts