Ad Widget

மாதத்திற்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம்!!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய மாதத்தில் ஒரு முறை விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்றமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு இரண்டு முறை, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இருப்பினும், விநியோகத்தர்களுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இரண்டு நாட்களுக்கு முன்பு முற்பதிவு செய்யாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது.

எனவே, எரிபொருள் விலை சூத்திரத்தை மாதத்திற்கு ஒருமுறை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான யோசனை இவ்வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Related Posts