Ad Widget

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு முக்கிய தகவல் – கிடைக்கவுள்ள சலுகைகள்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான்...

ரஷ்யா படைகள் வெளியேறும் வரை உக்ரைனில் அமைதிக்கு சாத்தியமில்லை:ஜோசப் பொரெல்

ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறும் வரை உக்ரைனில் அமைதி சாத்தியமில்லை, ஆனால் மாஸ்கோ அவ்வாறு செய்யத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கும் போதே பொரெல் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,ரஷ்யா தனது...
Ad Widget

உள்ளூர் உற்பத்திகளை இனி இணையம் விற்பனை செய்யலாம்! – ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் ,உள்ளூர் உற்பத்திகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மாதாந்த மகளீர் சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:  உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும்...

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 9 ஆம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிகக் கனமழையும் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில்...

துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் – கஜேந்திரன்

துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்தார். யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் வவுனியா...

பருத்தித்துறை கடற்பரப்பில் 14 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக மீனவர்கள் நேற்று புதன்கிழமை (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்புக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த 14 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் படகொன்றினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை...

இலங்கையில் 634 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில், 634 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி...

குளத்தில் மீன்பிடித்த இளைஞன் மாயம்!!

யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி வருகின்றனர். எனினும் குறித்த இளைஞனை காணவில்லை. இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்...

இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்!!

இலங்கையில், அதிகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இன்றையதினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்து, அது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது. இதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம்...

இலங்கை அகதிகள் சிலர் ருவாண்டாவிற்கு அனுப்பி வைப்பு!!

டியகோ கார்சியா தீவில் தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக "The New Humanitarian" இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியகோ கார்சியா தீவுக்கு சுமார் 200 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய...

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே...

வடக்கு மாகாண ஆளுநர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் போது ஆராய்ந்தார்.

சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் இதில் பங்கேற்ற நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின்...

விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் – அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு !

அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு எடுத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உட்துறை அமைச்சில் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....

ரணில் இனப் பிரச்சினை தீர்வுக்கு தமிழ் தரப்பை அழைப்பது ஓர் நாடகம் – கஜேந்திரகுமார்

இலங்‍கையில் சமஷ்டியாட்சி‍ முறையை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என 2021 இல் கூறிய ரணில் விக்கிரமசிங்க தற்போது இனப் பிரச்சினை தீர்வுக்கு காண்பதாக கூறி, தமிழ் தரப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது ஓர் நாடகமாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் கடுமையாக சாடினார். நாட்டில் ஒற்றையாட்சி முறையை...

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்!!

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்படாததையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை. அந்த வருடம் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் – மானியம் வழங்குவதில் நெருக்கடி!

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். கருவூலத்தில் இருந்து, தினசரி பணப்புழக்கத்தை கையாள்வது எவ்வளவு...

மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட போர் கைதிகள்! ஐ.நா பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் போர் கைதிகளை சித்திரவதை செய்ததாக ஐ.நா மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. இருதரப்பிலும் விடுவிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட போர் கைதிகளிடம் ஐ.நா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் ராணுவத்தினரை நாய்களை விட்டு கடிக்கவைத்தும், நிர்வாணப்படுத்தி உடலில் மின்சாரம் பாய்ச்சியும் ரஷ்ய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளது தெரியவந்தது. அதேபோல் உக்ரைன்...

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை!

இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர், அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள்...

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய அனைத்து தரப்பிற்கும் கூட்டமைப்பு அழைப்பு !

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது, அதன்படி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு மூலம் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுவது குறித்து பேசப்படவுள்ளது. கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள்...
Loading posts...

All posts loaded

No more posts